Pages

Back to Top

உடல் நலம் 9



   17





     18


   19

உடல் நலம் 8

    15



   16

உடல் நலம் 7

    13


   14

உடல் நலம் 6

   11



    12

உடல் நலம் 5

  9



   10

உடல் நலம் 4

   7


    8

உடல் நலம் 3

     5



nbsp;   6

உடல் நலம் 2





உடல் நலம் 1

பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பாலானவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்காங்க.

அவங்களுக்கு பயன்படும் விதத்தில் இந்த வீடியோவை உங்க கூட பகிர்ந்து கொள்ரேன்.ஹீலர்

பாஸ்கர் என்பவர் ரொம்ப அழகா சொல்லி இருக்கார். வியாதிகள் ஏன் உண்டாகிரது அதுக்கு

என்ன தீர்வு என்ரெல்லாம் புரியும் படி விளக்கமா சொல்லி இருக்கார். மருந்து மாத்திரை எதுவுமே

தேவை யில்லைன்னு அடிச்சு சொல்ரார். நம்மால முடிந்ததை ஃபாலோ பண்ணிபார்க்கலாமே?

எல்லாருக்குமே ஏதாவது உடல் ப்ராப்லம் இருக்கத்தானே செய்யுது. என்னதான் சொல்ராருன்னு

கேட்கலாமே இல்லியா? மொத்தம் 20-பகுதிகள் இருக்கு ஒர் நா விட்டு ஒரு நா ரெண்டு பகுதியா

பதிவு போடலாம்னு இருக்கேன், ஆர்வமுள்ளவங்க பார்த்து கேட்டுதெரிஞ்சுக்கலாமில்லையா?






ராம நாம மகிமை


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.அந்த எழுத்துக்கள்தான் ரா......... ம...............



ஷஷ்டி அப்த பூர்த்தி










                    



                            


சிந்தனைக்கு

 நஷ்டமில்லாமல் வெற்றி இல்லை
 முட்கள் இல்லாமல் அறியணை இல்லை
 முயற்சி இல்லாமல் பெருமை இல்லை.
 சிலுவை இல்லாமல் மகுடமில்லை.(அறிஞர் பென்)

 குவிந்து கிடக்கும் சாம்பல் மீது தண்ணீரைத்தெளித்தால்
 தண்ணீர் போன இடம் தெரியாது. நல்ல எண்ணம், நல்ல
 பிரார்த்தனைகள் இவைகளுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும்.
 அகம்பாவம் குவிந்து கிடக்கும் சாம்பலுக்கு சமமானது.
 அது இருக்கும் மனத்தில் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்
 எடுபடாது.(ராமகிருஷ்ன பரமஹம்சர்)

 சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது - இதயத்தின் இசை.
 சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது-சக்தியின் பிறப்பிடம்.
 விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது- இளமையின் ரகசியம்.
 படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது- அறிவின் ஊற்று.
 நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது- மகிழ்ச்சிக்கு வழி.
 உழைக்கநேரம்ஒதுக்குங்கள்அதுவெற்றியின்விலை.   

அன்பனே பொழுதைப்பொன்னாக்கு.ஒரு நிமிஷம் கூட வீணாக்காதே,
 யோசித்துப்பார், ஒரு நாளைக்கு 24-மணி நேரம். அதில் சுமார்8- மணி
 நேரம் இளைப்பாறலாம்.தேகப்பயிற்சி செய்ய, குளிக்க ,துவைக்க, உண்ண உடுக்க 4-மணி நேரம், வயிற்றுப்பிழைபுக்காக தொழில்புரிய8-மணி நேரம்
இந்த 8-மணி நேரத்தைப்பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் வெளியேசென்று அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கழிக்கலாம்.
 மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு.(சுத்தானந்த பாரதியார்)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

வாழ்த்துக்கள்.

அனைத்து பதிஉலக நண்பர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய  தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

ஆச்சரியம்

போனவருடம்  என்ஃப்ரெண்ட் போட்ட பதிவு இது. அப்போதான் பதிவு எழுத ஆரம்பித்த புதிது. இந்தப்பதிவு நிறையபேருபார்க்கலே. அதான் அவ என்கிட்ட  இப்பதான் உன்பக்கம் நிரையபேரு வராங்களே இது கொஞ்சம் சுவாரசியமா இருக்கே மறுபடி உன்ப்ளாக்கில் போடுன்னு சொன்னா. அவகேட்டதற்கு இணங்க அதையே மீள் பதிவா போட்டிருக்கேன். இப்ப இங்க நிறையபேரு வரீங்க இல்லியா எல்லாரும் படிக்கமுடியுமே அதான்.

கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)

என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ

மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.

இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்

போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்

களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை

பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.


மின்சாரம்.... அது மின்சாரம்

போனவாரம் ஒரு வெள்ளிக்கிழமை காலை10-டு இரவு10- வரை கரண்ட்கட். இரவு10- மணிக்கு கரண்ட்வந்தது. இவ்வளவு நேரம் போயாச்சே இனிமேல போகாதேன்னு  நினச்சு இன்வெர்ட்டர், கார்ட்லெஸ்போன், மொபைல்போன், எல்லாம் சார்ஜ் பண்ண வச்சேன். கம்ப்யூட்டர் ஆன்பண்ணி உக்காந்தேன். சடன்னா 10.30-க்கு லைட் எல்லாம் ரொம்ப பவர்ஃபுல்லா கண் கூசும்அளவுக்கு பளிச்சுனு எரிஞ்சுது. ஃபேனும் எக்கச்சக்கஸ்பீடில் சுத்த ஆரம்பிச்சது. என்னது இப்படி இருக்கேன்னு ஒவ்வொரு ஸ்விச்சா ஆஃப் பண்ணலாம்னு நினைச்சு எழுந்துபோரதுக்குள்ள  ஒயர் ஒன்னொன்னா ஸ்பார்க் வர ஆரம்பிச்சு எல்லாம் இயக்கத்தை நிறுதிச்சு. ஸ்பார்க் வந்துண்டே இருந்தது  எனக்கா, என்ன பண்ணனும்னே தெரியல்லே. ஸ்விச் ஆஃப் பண்ண தொடவே பயமாச்சு. எங்கியானும் ஷாக் அடிச்சு நம்மை தூக்கி எரிஞ்சா என்ன பண்ண? இரவு நேரம் வேர எங்க போக என்ன பண்ணனு ஒன்னும் புரியல்லே.

வெற்றி பெற 10 வழிகள்

LAWRANCE.D.BRENNAN----  MAKE THE MOST OF YOUR HIDDEN MIND POWER.( நன்றி)



   மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.


 ரொம்ப நாட்கள் முன்பு இந்தபுக் படிச்சேன். நம் பதிவர்களில் எத்தனை பேரு இதைப்படிச்சிருப்பாங்கன்னு தெரியல்லே. தெரியாதவங்களுக்காக இந்தபுக்கி
லிருந்து சில விஷயங்களைப்பகிர்ந்து கொள்கிரேன்.

 ஒவ்வொருவர் மூளையில் உள்ள  அணு சக்தி  நியூயார்க் நகரத்தையே தகர்க்கும் சக்தி வாய்ந்தது.என்று சொன்னார்  நார்மென் வின்செண்ட்பீல். அவ்வளவு சக்தி நம் மனதுக்கு இருக்குமானால் அதை ஏன் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது?பெர்னாட்ஷா என்ன செய்தார்? பிக் மேலியன் என்று ஒரு நாடகம் எழுதினார். வெரும் கூடைக்காரியாக இருந்த பெண்ணின் உடையையும் பேச்சையும் மாற்றி அவளை ஒரு பெரிய இடத்துப்பெண்ணாக மாற்றமுடியும் என்பதைப்பற்றி அந்த நாடகத்தில் குறிப்பிட்டார்.கூடைக்காரியாக இருந்தபோதும் பெரிய மனுஷியாக ஆன பிறகுமவளிடம் இருந்தது அதே அறிவுதான் ஆனால் ஒரு சின்ன வித்யாசம். முன்பு இருந்த அறிவின் சக்தியைமற்றவர்கள் பார்க்கும் படி அந்தப்பெண் வெளிக்காட்டவில்லை.அதை தூசி தட்டி வெளிக்கொண்டுவர ஒரு ப்ரொபசர் உதவிய  உடன் அவள் சீமாட்டியாக மாறி விட்டாள். அதை எழுதிய ஷாவின் வாழ்க்கையிலும் இதேதான் நடந்தது. டப்ளினில் ஒரு பெயர் தெரியாத கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்  ஷா. அவருடைய மூளை அந்த வேலையிலேயே துருப்பிடித்து போயிருந்தால், இப்போது நாம் அவரை உதாரணம் காட்டிக்கொண்டிருக்கமாட்டோம். அவர் தன்னுடைய நாடகம் எழுதும் திறமையை  இலக்கியம் படைக்கும் கெட்டிக்காரத்தனத்தைஉலகத்துக்கு பறை சாற்றியதாலேயே இன்றும் அவரை நினைக்கிரோம்.பேசுகிரோம் பாராட்டு கிரோம். உலகம் நம்மைப்பாராட்டவேண்டுமென்றால் நம்முடைய திறமையை உலகுக்கு ச்சொல்ல வேண்டும்.

இடுக்கண் வருங்கால் நகுக.

கிருஷ்ண ஜயந்திக்கும், கம்யூனிசத்துக்கும் உள்ள ஒற்றுமை

 கால்  மார்க்ஸ்.

 ஷார்ட் சர்க்யூட்,  பொறாமையின்  பேசிக் ப்ராப்ளம்

 வயறு  எரியுது.

 பாக்சிங்க், கடவுள் காளி சிலை

  நாக்   (கு)   அவுட்.

 தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்யாசம

 தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம். பொங்கல் அன்னிக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.(எத்தனைபேருதான் இதையே சொல்வாங்க?)

  L. I.C. யோட 14-வது மாடியில் ஏன் சந்தனம் தடவி இருக்காங்க?

 அது ”மொட்டை” மாடியாம்.

 ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வராங்க , அண்ணன் மேல் மூச்சு வாங்கரான். தங்கை??

 ஃபீமேல் மூச்சு வாங்குவா.

 எலிக்கு ஏன் வால் இருக்கு?

 செத்தபின்னாடி பிடிச்சு தூக்கிபோட.

 ரஷ்யால ஏன் கொசுஇல்லே

 ஏன்னா அங்க அதுக்கு வேர பேரு.

 ராஜா ஹரிச்சந்திரா என்னபேஸ்ட் யூஸ்பண்ணி இருப்பார்?

 பிராமிஸ்.

 பஸ்ஸை பின்னால் தள்ளினா என்னாகும்

 பின் வளைஞ்சு போகும்.

 மஹாத்மா காந்திக்கும் குன்னக்குடி வைத்ய நாதனுக்கும் என்ன வித்யாசம்?

 அவர் நான்   வயலினிஸ்ட்.  இவர்  வயலினிஸ்ட்.

 வயிறு எரிகிரது,  அடுப்பு எரியமாட்டேங்குது ஏன்?

 ரெண்டுக்குமே GAS  ப்ராப்ளம்

ஆதார் அடையாள அட்டை.

இந்திய குடிமகன்,  இந்திய குடிமகள் என்பதற்கான அடையாள அட்டை..
என்பெண் மும்பை மெயின் சிட்டியில் வசித்து வருகிறாள் அவ ஜூன்மாசம்
 10-ம் தேதி வாக்கில் எனக்கு போன்பண்ணி சொன்னா. அம்மா இண்டியன் கவர்மெண்ட்லேந்து ஒரு பர்மனெண்ட் ஐ. டி. கார்ட் கொடுக்கப்போரா. அதுக்கு ஃபார்ம் உன் பேங்கில்போய்க்கேளு. அதை ஃபில் அப் செய்துகொடு. நாங்கல்லாம் இங்க கொடுத்தாச்சு. இது முக்கியமான ஐ. டி கார்ட். எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும். உடனே போயிப்பாருன்னு சொன்னா. நானும் என்.அக்கவுண்ட் வச்சிருந்த கேனரா பேங்க்ல போயி முதல்ல கேட்டேன் ஆதார் ஃபார்ம் வேணும்ன்னேன்(U.I.D.-UNIQUE  IDENTIFI CATION  DRIVE).  சுருக்கமா ஆதார்.ஃபார்ம்
முதல்ல நான் என்ன கேக்கரேன்னே அவாளுக்கு புரியல்லே. மேடம் நீங்க சொல்வது இப்பதான் கேள்விப்படரோம். என்னன்னு சரியா புரியலே. நீங்க வேர எங்கியானும் கேளுங்கன்னு சொல்லிட்டா.னானும் விடாம ஸ்டேட் பெங்க், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா எல்லா இடத்திலும் போயி கேட்டேன். அவங்களுக்கும் இது பத்தி ஏதுமே தெரிஞ்சிருக்கலை. பெண்ணிடம் சொன்னேன். அவ  நீ நேரா முனிசி பாலிடில போயிக்கேளுன்னா. என் வீட்லேந்து முனிசிபா லிடி 5-கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நான் இருப்பது ஈஸ்ட் பக்கம் அது வெஸ்ட்பக்கம். ஆட்டோக்காரன் 30- ரூவா போகமட்டும் கேப்பான். சரின்னு போனேன். உள்ள போயி கேக்கசொன்னா. போயி கேட்டேன் நீங்க கேக்கர ஆதார் ஃபார்ம் இன்னும் இங்க வரவே இல்லே. இன்னும் ரெண்டுமாசம் கழிச்சு வாங்கன்னு சொல்லி செப்டம்பர்15-ம்தேதின்னு வரச்சொல்லி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தான்.

தேவ் லாலி


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

மினி சந்திப்பு.



                               






 நான் இப்போ மகன்வீட்டுக்கு வந்திருக்கேன். நான் இருக்கும் அம்பர் நாத்லேந்து மகன் இருக்கும் தாணா என்னுமிடம் 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.லோக்கல்வண்டி பிடித்து ஒருமணி நேரம் ட்ராவல் பண்ணீதான் அங்க போகனும். அவங்க வீட்ல பிள்ளையார் 5 நாள் வச்சு பூஜை பஜனை அன்னதானம் எல்லாம் சிறப்பாகச்செய்வார்கள். என்னையும் வாரச்சொல்லி இருந்தா. போயிருந்தேன். சதுர்த்திக்கு முதல் நாள் பிள்ளையார் அழைத்து வருவதுதொடங்கி சிறப்பான வழிபாடுகள் எல்லாம் செய்தார்கள். தினசரி 3 வேளை பூஜை ஆரத்தி பிரசாதங்கள் என்று நடந்தது. பிள்ளையார பார்க்க நிறையபேர் வந்தார்கள். எல்லாருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதம் கிஃப்ட் ஐட்டம் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள்.

கோவிந்தா,,,, கோவிந்தா




என் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்
இருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .



சந்தேகம்

நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
 காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
 ஹாலில் வரிசையாக அமர்வார்கள்.

ஐரோலி பாலாஜி

ஆடி மாசம் பிறந்ததுமே வரிசையாக பண்டிகைகளின் அணி வகுப்பு
 தொடங்கிடு.ம் 8, 8, நாட்களில் வரிசையா பண்டிகைகள். கணவன் மனை வி
 இருவருமே வேலைக்கு போகும் வீடுகளில் பண்டிகைகளை சிறப்பாக
 கொண்டாட டைம் ஒத்துழைப்பு கொடுக்காது. வீட்டளவில் சுருக்கமாக
 ஸ்வாமிக்கு ஒரு வெத்தலை ,பாக்கு, பழம், தேங்காய், கடைகளில் வாங்கும்
தின்பண்டங்களை வைத்து சுருக்கமாகபண்டிகைக்களைகொண்டாடுகிறார்கள்.
கொண்டாடவும் முடியாமல், விடவும் முடியாமல் அவஸ்தைதான். அதே
 கோவிலில் ஸ்வாமிக்கு ஒரு திருக்கல்யாணமோ, லஷார்ச்சனையோ
 நவக்ரஹ ஹோமமோ நடக்கும்போது, அதுவும் லீவு நாட்களில் வந்தா
 உள்ளூரில் இருப்பவர்களும், பக்கத்து ஊர்களில் இருப்பவர்களும் ஒன்று
 கூடி சிறப்பாக நடத்தி வருவது நல்ல விஷயம். அந்தபூஜையின் போது
 கலந்து கொண்டால் தெரிந்த வர்களை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷம்
 மன நிம்மதி கிடைப்பதாக நினைக்கிரார்கள்.

கல்யாணமாம் கல்யாணம் - 3

            மறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்லாம் முறைப்படி வைதீகச் சடங்குகளுடன் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 10.30 முகூர்த்தம். நாதஸ்வர ஓசையுடன் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. எல்லாருக்கும் ஜூஸ் உபசாரம். மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாளான்னு உற்சாக விசாரிப்புகள். 

கல்யாணமாம் கல்யாணம் - 2

      ரகு லீலா மால் ரொம்பவே பெரிசா பிரும்மாண்டமா இருந்தது. மூணாவது மாடியில் ப்ரோக்ராம் ஏற்பாடு செய்திருந்தா. எஸ்கலேட்டரில் மேலே போனோம். ஃபுல்லா ஏ சி. வெளியே மழையின் குளிர் ஒரு புறம், உள்ளே ஏ சி குளிர் ஒரு புறம்ன்னு ஒரே ஜிலு, ஜிலுப்புதான். மேலே ஒரு தனி இடமொதுக்கி அங்கே பூரா நம்ம கிராமத்தைப் போல வடிவமைத்து இருந்தார்கள். மேலே ஓலைக் கூரை வேய்ந்து, அங்கேந்து நிறையா அரிக்கேன் லைட்டுகளை தொங்க விட்டிருந்தா. கூடவே பேப்பர் ரிப்பனில் தோரணங்களையும் தொங்க விட்டிருந்தா. உக்கார நிறைய பிறம்பு நாற்காலிகள்  சில கயித்து கட்டில்களும் இருந்தது. தரையில் மணல் பரப்பி இருந்தார்கள்.  

கல்யாணமாம் கல்யாணம் - 1

     சமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெண் வீட்டுக் கல்யாணம் என்பதால் கல்யாணத்துக்கு 4 - நாள் முன்பு சுமங்கலி பூஜை எல்லாம் முறையாக பண்ணினார்கள். அந்த ஃபங்க்‌ஷன் கோலிவாடா என்னுமிடதில் இருந்தது. ஆத்மார்த்தமாக, முறையாக எல்லாம் செய்தார்கள். பெண்ணின் அப்பாவுடன் பிறந்தவர் நவி மும்பை நெருல் என்னுமிடத்தில் வசித்து வந்தார். அவருடன் கூடப்பிறந்தவர்கள் 2 அண்ணா, 1 தம்பி. அந்த தம்பி வீட்டில் தான் பூஜை நடந்தது. எல்லாருமே குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்கள். 2 அண்ணாவும் வெளி நாட்டில் தோஹா கத்தாரில் இருந்து வந்திருந்தார்கள். சமையலுக்கும் ஆள் போட்டிருந்தார்கள். 

சிவமணி, ஜெயராம் ஜுகல் பந்தி


அந்தப்பக்கம் சினிமா பாடல்கள். இந்தப்பக்கம் பக்திப்பாடல்கள்.
பக்திப்பாடல்கள் ரசிப்பவர்களும் இருக்கா ளே இல்லியா.
அவாளுக்காக.















.

ஹெல் மெட் காமெடி



பல வருடங்கள் முன்பு நாங்க லீவுக்கு கிராமத்துக்குபோயிருந்தோம்
 ஒவ்வொரு வருஷமும் பெரிய லீவில் கிராமம் போவோம். அதுபோலவே
என் தங்கை களும் குழந்தைகளுடன் வருவார்கள். வீடு கல்யாண க்களைகட்டும்.குழந்தைகளும் ஒருடசனுக்கு மேலே, பெரியவர்களும் அப்படியே.ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்தான்.குழந்தைகளுக்கு ஊரில் ஒவ்வொரு விஷயமுமேஆச்சரியமா இருக்கும். அதுவும் எங்க வீட்ல கொல்லைப்புறம் மாடுகள் நிறையவளர்த்துவந்தோம். அடிக்கடி கன்னுக்குட்டி போட்ட்டு மாட்டுக்கொட்டிலும்எப்பவுமே நிறம்பி இருக்கும் குழந்தைகளுக்கு கன்னுக்குட்டியுடன் விளையாடுவது சந்தோஷமான பொழுதுபோக்கு.பிறந்து 4 நாட்களே ஆன கன்னுக்குட்டிகளகழுத்தில் கயிறு கட்டி தெருத்தெருவாக கூட்டிப்போவார்கள். மாடுகளுக்காக

ஒன் டச் எஸ் எம் எஸ்

atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow

பலகரை ஜோதிடம்.



ரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது கோவில் வெளீ வாசல் தின்ணையில் ஒரு பெரியவரைச்சுற்றிநிறைய பேரு உக்காந்திண்டு இருந்தாங்க. நாங்களும் அங்க என்ன நடக்குதுன்னுபாக்கப்போனோம். அந்தப்பெரியவர் கை நிரைய சோழிகளை வைத்துக்கொண்டுஅதை குலுக்கிப்போட்டு எல்லாருக்கும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்.

நினைவாற்றல் பெருக.



இந்தப்பெட்டி தெரியுமா?, அந்தப்பெட்டி தெரியுமா?

முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான்.

இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா?.

முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியும் இதுதான், இதுதான்.

இந்த எலி தெரியுமா?, அந்த எலி தெரியுமா?,

முத்து செய்த பெட்டியில் வைத்த,னல்ல ரொட்டியை,தினம் தின்ற

எலியும் இதுதான், இதுதான்.

கோபம்(2)

இன்றைய கோபம்,  B.S.N.L.  காரங்க மேல. நான் ரெண்டு வருஷமா போன் பில்
  E.C.S. மூலமாகத்தான் கட்டி வரேன். இவ்வலவு நாளா எல்லாம் சரியாதான்
இருந்தது. இந்தமாதம் போன் பில் 5000-ரூபாய்க்கு வந்தது.எனக்கு ஒரே ஷாக்
என்னது இது இவ்வளவு பில் எப்படி? என்று மண்டைக்குடைசல்.பேங்க் பாஸ்
 புக் எண்ட்ரியை பார்த்தேன். நாலு மாசமா பில் கட் பண்ணவே இல்லே. நானும்
 பாக்கலே. பேங்க்ல போயி கேட்டேன்.  B. S. N. L காரங்க பில் அனுப்பலே, நாங்களும் கட்டல்லேங்கராங்க. போன் ஆபீசுக்குப்போயி கேட்டேன். எனக்கு
எப்பவும் குழந்தைகள் எல்லாரும்தான் போன் பண்ணுவாங்க .நான்யாருக்குமே
 பண்ண மாட்டேன். அப்படி இருக்க இவ்வள்வு பில் எப்படி வரும்??அங்கபோனா
 அவங்க E. C. S. பத்தி என்கொயரி கல்யாண்லபோயி போன் ஆபீசில் கேளுன்னு
 சொல்லிட்டாங்க.அம்பர் நாத்லேந்து கல்யாண் 20 கிலோ மீட்டரில் இருக்கு.
லோக்கல் ட்ரெயின் பிடித்து போனேன். ஆபீஸ்போரவா கூட்டம் வண்டில
 நிக்கக்கூட இடம் இல்லே.10.30-க்கு போனேன். சீட்ல யாருமே வந்திருக்கலை.
 வெயிட்டிங்க தான். 11.30-க்கு ஆடி அசைஞ்சுண்டு வரா. நான் என் ப்ராப்லம்
 சொன்னேன்.

போராட்டம்

ஜபல்பூரில் 5வருஷம் இருந்துட்டு சந்த்ரபூர் வந்து 10 வருடம் இருந்தோம்.
 ரெண்டாவதுமூனாவது பையன் இருவரும் பத்தாவது முடிந்ததும் பாம்பே
 போயி பாண்டுப் என்னுமிடத்தில் ஒரு ஒரு சாலில் ஒரு ரூம் வாடைகைக்கு
 எடுத்துண்டு ப்ரைவேட்கம்பனியில் வேலை தேடிண்டா. நெருங்கிய சொந்தக்
காரா வேலை கிடைக்க ஹெல்ப் பண்ணினா. 10டு5 ஆபீசில் வேலை. 6டு 9
நைட் காலேஜில் மேற்படிப்பு. காலை 5மணிக்கு எழுந்து சப்பாத்தி பாஜி பண்ணி
 பால்கவரில் சுருட்டி எடுத்துண்டு பேண்ட் பாக்கெட்டில் வச்சுண்டு போவா,10
மணி ஆபீசுக்கு 8 மணிக்குள்ள கிளம்பனும்.இரவு வரும்போது 11,, 12 ஆயிடும்.
 வந்து இரவு சாப்பாடு பண்ணி சாப்பிடனும். மழை நாள்னா இரவு ரொம்பவே
 நேரம் ஆகும். அண்ணன் தம்பியிடம், வீட்டுக்குப்போயி சமைக்க நேரமில்லே
 ஆலுக்கு ஒரு க்ளாஸ் பால் மட்டும் குடிச்சுட்டு போலாம் என்பான். தம்பியோ
 போடா பால் குடிச்சா ல்லாம் பசி அடங்காது. ரெண்டுக்ளாஸ் பால் 10 ரூவா
 ஆகும் அதுக்கு ஒருடசன் பழம் வாங்கி ஆளுக்கு 6, 6 சாப்பிடலாம் என்பான்.

 எந்த பொழுதுபோக்குகளிலும் மனசை திருப்பாமல் , ஒரு கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகாமல் முன்னுக்கு வரணும் என்ற வெறியோட
கடுமையான உழைப்புஎன்றே 10 வருடங்கள் ஓட்டினார்கள். அந்தவயசுக்கு
இவ்வளவு கட்டுப்பாடு. பாராட்டவேண்டிய விஷயம். அப்படி கஷ்ட்டப்பட்டதுக்கு இன்று இருவருமே நன்றாக இருக்கா. அவர்கள் நாலு
 பேருக்கு வேலை கொடுக்கும் நிலமைக்கு உசந்திருக்கா. கல்யாணம்
குழந்தை குட்டின்னு எல்லாரும் நல்லா செட்டிலாயிட்டா.

போராட்டம்(2)

பிறகு இவருக்கு மாத்தல் உத்திரவு வந்தது. குழந்தைகளி  படிப்பு காரணத்தினாலஒ
இவர் முதலில் கிளம்பி போனார். ஒருவருஷம் கழிச்சு  நாங்க போனோம்.
 பூனாவில் க்ளைமேட் எப்பவுமே கூலாகவே இருக்கும். ஜபல்பூரில்  எல்லா
க்ளை  மேட்டுமே எக்ஸ்ட்ரீம். நாங்கபோனது நல்ல வெய்யில் காலம். வெய்யில்
 நாஅப்படி ஒரு வெய்யில். உடம்பெல்லாம் கொதிக்கும்.வீட்லயும் தரை  யெல்லாம் கொதிக்கும்  . சாயங்காலம் மொட்டை மாடியில்  த்ண்ணீர் ரொப்பி
வைத்து இரவு  அலம்பி விட்டு அங்கதான் படுக்க முடியும்.வாரம் ஒரு முறை
தான் மார்க்கெட்டில் எல்லாம் கிடைக்கும்.எங்களுக்கெல்லாம் வெய்யில்
 ஒத்துப்போகாம சன் ஸ்ட்ரோக்கே வந்தது.  ஐயோ இங்உள்ளவங்கல்லாம்
 எப்படிதான் இருக்காளோன்னுதான் நினைக்கத் தோனிச்சு.  அப்படி  ஒரு
வெயில் இதுலயும் ஒரு   நல்லது, நடந்தது. பையனின் தோல் பிரச்சனை
  காணாமலே போச்சு.

போராட்டம்(1)



போன பதிவில் என் முதல் மகனின் வாழ்க்கை அனுபவங்களைபகிர்ந்து கொண்டேன். இப்போ 2,3- வது மகன்களின் அனுபவம்.ரெண்டாவது மகன் என் அம்மாவிடம் 5 வருடங்கள் வளர்ந்தான்.தமிழ் மீடியம் படிப்பு.3-வது மகன் 4 வயது வரையில் நல்லா வேஇருந்தான். பிறகு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம் ஆரம்பமாச்சு.

கோபம்



முதலில் என்கோபம், பேங்க் காரங்கமேல. நான் கடந்த 20 வருஷமாக பென்ஷன்(ஃபேமிலிபென்ஷன்) பேங்க் போய் வாங்கிண்டு இருக்கேன்.பென்ஷன் ஹோல்டர்னா ஒவ்வொரு மாசமும் பாஸ்புக்ல எண்ட்ரி இருக்கணும்.காலை10 மணிக்குபோயி டோக்கன் வாங்கிண்டு ஒருமணி நேரம் க்யூவில் கால்கடுக்க நின்னுபணம்வித்ட்ரா பண்ணிட்டு, வேற கவுண்டர்போயி பாஸ்புக்ல என்ட்ரிபண்ணவும்பெரியக்யூவில் அரைமணி நேரம் நின்னு என்ட்ரியும் பண்ணிட்டு வருவேன்.முதல் வாரம் கூட்டம் இருக்கும் என்று 10- தேதிக்குமேலதான் போவேன். யாரிடமும் ஹெல்ப்புக்கு போகமாட்டேன். எல்லாருமே தெரிந்த முகங்கள்தான். யாரும் வன்து ஹெல்ப்பும் பண்ணமாட்டாங்க. இதுல ஒவ்வொரு வருஷமும் நவம்பர்மாதம்லைஃப் சர்ட்டிபிகேட்கொடுக்கணும். நான் உசிரோடதான் இருக்கேன் வேற ஒருஇடத்திலும் வேலை எதுவும் பாக்கறதில்லைனு ஒருஃபார்ம் ஃபில் பண்ணி கொடுக்க்கணும். அதையும் கரெக்டாவே கொடுப்பேன். இப்ப கடந்த நவம்பரில்ஃபார்ம் ஃபில் அப் செய்து கொடுக்கும்போது தலைவலி ஆரம்பம் ஆச்சு.




நீங்கதான் லஷ்மின்னு என்ன நிச்சயம். அதுக்கு என்னப்ரூஃப்? நீங்கதான் லஷ்மிஎன்பதை ஒரு க்ரேட் ஒன் ஆபீசர் கிட்டேந்து லெட்டர் வாங்கி வாங்க அனாதான்உங்க ஃபார்ம் ஏத்துப்பொம் என்று சொல்லிட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். எவ்வளவு வருஷமா பென்ஷன் வாங்கிண்டு இருக்கேன்இங்க உள்ளவங்க எல்லாருக்குமே என்னை நல்லா தெரியுமே என்றேன்.அவங்க காதிலேயே வாங்க தயாரா இல்லை. பேங்க் ஆர்டர் இது நீங்க கோவாபரேட் பண்ணுங்க மேடம்னு சொல்லிட்டாங்க. வீடு வந்து பையனுக்கு போன்பண்ணீ சொன்னேன்.பேங்கலயே யாரும் க்ரேட் ஒன் ஆபீசர் இல்லியா ஆவரிடம்கேட்டு பாருங்க. என்றான் . பேங்க் காரா அப்படி சர்டிபிகேட் எல்லாம் தர மாட்டாளாம்.




சரின்னுபையன்ஒருக்ரேட்ஒன்ஆபீசரைத்தேடிப்பிடிச்சுஎன்னைப்பற்றிசொல்லிஒரு சர்டிபிகேட்டும் வாங்கி தந்தான். வேடிக்கை என்னன்னா அவரு யாருன்னுஎனக்குத்தெரியது, நான் யாருன்னு அவருக்குத்தெரியாது. ஆனா சர்டிபிகேட்லஇவங்கதான் லஷ்மி, இவங்களை எனக்கு கடந்த 10 வருஷமா தெரியும் என்றுஎழுதிக்கொடுத்தார். பேங்க்ல கொண்டு கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிட்டாங்க.பென்ஷனும் ஒழுங்கா வர ஆரம்பித்தது. இது என்ன அசட்டுத்தனம். நான் முழுசா போயி நின்னு நாதான் லஷ்மின்னா உண்மையை நம்ப மாட்டாங்களாம்.யாரோ முகம் தெரியாத க்ரேட் ஒன் ஆபீசர் எழுதிக்கொடுக்கும் ”பொய்”சர்ட்டிபிகேட்டத்தான் நம்புவாங்களாம்.




சரிமாசாமாசம்இப்படிகாலகடுக்கக்யூலநின்னுஅவஸ்தைப்படவேண்டாமேன்னுஒரு ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளிக்கேஷன் பண்ணி கொடுத்தேன்.ஜனவரி10-தேதிக்கு ப்ஃஃர்ம் ஃபில் பண்ணி கொடுத்தேன்.அங்க உள்ள மேடம் 15- நாள்லகார்டு கிடைக்கும்னாங்க. நானும் வெயிட் பண்ணி பாத்தேன். அடுத்தமாதமும்கார்டு வல்லை. வழக்கம்போல பேங்க் போயி ஒன்னரை மணி நேரம் க்யூல நின்நு பணம் வித்ட்ரா பண்ணி பாஸ்புக் எண்ட்ரியும் பண்ணிட்டு அந்தமேடத்தைதேடினேன். அவங்க டேபிள் காலியா இருந்தது. பக்கத்து டேபிள் மேடமிடம்நான் ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணி ஒருமாசம் ஆச்சு கார்டுவல்லியேன்னுகேட்டேன். அவங்க அலட்சியமா எல்லாம் வரும்போது வரும்னுட்டாங்க.




அதுக்கு அடுத்தமாசமும் இதே கதை. அப்படியா மூணூ மாசம் ஆகியும் கூடகார்டு கிடைக்கலை. இப்ப இந்தமாசம் சீக்கிரமே பேங்க் போனேன் அந்த ஏ. டி. எம்டேபிளில் மேடம் இருந்தாங்க. நேரா அவங்ககிட்டபோயி கேட்டேன். அவ லெட்ஜர் எல்லாம் எடுத்துபாத்துட்டு மேடம் உங்க கார்டு ஜனவரி 25-ம் தேதியே வந்தாச்சே, என்று சொல்ரா. நான் மாசாமாசம் வந்து கேட்டுகிட்டே இருந்தேனேயாருமே சரியா பதிலே சொல்லலியென்னேன். அந்தன்தடேபிள்ள இருக்கரவங்களுக்கு அவங்கவங்க வேலை பத்தி தான் தெரியும். எல்லா டேபிள் வேலையும்தெரியாது. நீங்க நேரா என்கிட்ட கேட்டிருக்கணும் என்று சொன்னா. நான் வந்தநேரம் இந்தடேபிள் காலியா இருந்தது அதனால பக்கத்து டேபிள் மேடம் கிட்டகேட்டேன். என்றேன்.தவிர பாஸ்வேர்ட் போஸ்ட்ல வருனு சொன்னாங்களேஎன்ரேன். யாரு சொன்னா அப்படி, அதெல்லாம் ஒன்னுமில்லை நீங்கபேங்க்லவந்துதான் கலெக்ட் பண்ணிக்கணும் என்கிரா.எப்படியோ கார்ட் கையில் வன்தாச்சு.இனிமேலதான் யூஸ்பண்ண ஆரம்பிக்கணும்.

எதிர் காலம் (7)



நாமக்கல்லில் இப்படி 5 வருடங்கள்.பிறகு ஈரோடு டிரான்ஸ்பர் வந்தது.
அதேபோல வீடுதேடும் படலம் குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல் தே
டும் படலம். பாங்கிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வாடகைக்
கு வீடு எடுத்து, செட்டிலான பிறகு குழந்தைக்கு ஸ்பெஷல் ஸ்கூல்
எங்க இருக்குன்னு தேடல். நாங்க இருக்கும் இடத்திலிருந்து 15 கிலோ
மீட்டர் தொலைவில் திண்டல்னு ஒரு இடத்தில் ஒருஸ்கூல் இருந்தது.
சக்திமசாலா தயார் செய்பவர்கள்தான் அந்தஸ்கூலை நடத்தி வந்தார்
கள். அங்கபோய்க்கேட்டோம். இங்க அட்மிஷனுக்கு காசெல்லாம் வாங்கரது
இல்லை இதை ஒரு தொண்டாகவே நடத்தரோம். ஒரே கண்டிஷன் என்னன்னா
குழந்தையின் அம்மாவும் அவன் கூட 10- டு 4 இங்கியே தங்கனும் என்றார்கள்.
குழந்தையின் அம்மாவுக்கோ உடல் நிலை அதற்கு இடம் கொடுக்கலை.

எதிர்காலம்(6)



குழந்தையை வீட்டுக்கு கூட்டி வந்ததுமுதல் அவனுக்கு ட்ரெயினிங்க் கொடுப்பதிலேயே நாளின் பெரும்பகுதி கழிந்தது.வீட்டுக்கு யாராவது வந்தா எல்லாரும் மராட்டியிலும்ஹிந்தியிலும் பேசுவது குழந்தைக்கு ரொமவே குழப்பமாச்சு. அதனால என் பையன் பேங்கில் போய் தமிழ் நாட்டுக்கு டிரான்ச்பர் கேட்டான். பூனாவில்தான் ஹெட் ஆபீஸ்இருக்கு அங்க போயி பெரிய ஆபீசரைப்பாருன்னு சொன்னாங்க. அவனும் பூனா போயி

பெரிய ஆபீசரிடம் மகனின் ப்ராப்ளம் பற்றி சொல்லி தமிழ் நாட்டுக்கு டிரான்ஸ்பர்வேணும்னு கேட்டான். ஒரே ஸ்டேட்னா ஈசியாமாத்தலாம். தமிழ் நாடு கேக்கரீங்களேபோகவ்ர மத்தசெலவுகள் நீங்கதான் ஏத்துக்கணம். பேங்க் கொடுக்காது என்றார். எப்படியாவது மாத்தல் கொடுங்க சார்னு கெஞ்சி, கூத்தாடி 6 மாசம் கழித்து ட்ரான்ஸ்பர் வந்தது.

எதிர்காலம்(5)



குழந்தை பற்றிய சந்தேகம் உடனே க்ளிய்ர் பண்ணிக்கணு்ம் எனறு அடுத்தநாளே டாக்டரை தேடிப்போனான். சைல்ட் ச்பெஷலிஸ்ட் தான். எல்லா செக்கப்பும்பண்ணிட்டு பெரிய குண்டா தூக்கிப்போட்டார். குழந்தை பிறவியிலேயே டௌன்சிண்ட்ரோம் பேபியா பிறந்திருக்கு. வயத்ல இருக்கும்போதே ஸ்கேன் பண்ணி யிருக்கனும். அப்பவே தெரிஞ்சிருக்கும். வேண்டாம்னு பண்ணி யிருக்கலாம். உங்க ரெண்டுஃபேமிலியுலும் யாருக்காவது இதுபோல மூளை வளர்ச்சி இல்லாம இருந்திருக்கானுகேட்டார். மகன் மருமகள் இருவருமே டாக்டரிடம் போயிருந்தார்கள். இல்லை ரெண்டுசைடிலும் யாருக்கும் இதுபோல இல்லனு சொன்னா. நீங்க சொந்தத்ல கல்யாணமா என்றார்

எதிர்காலம்(4)



நாங்க கல்யாணப்பேச்சை எடுத்ததுமே அவன் எனக்கு இப்பொ கல்யாணத்தில் நாட்டமில்லை.இப்போகல்யாணமெல்லாம் வேண்டாம்னு பிடிவாதமா சொன்னான். ஏய், இப்பவே உனக்கு 30 வயசாச்சு, இப்ப கல்யாணம் பண்ணாம
எப்போ பண்ரது? உன் தம்பிகள், தங்கை எல்லாம் ரெடியா இருக்காங்க. உனக்கு
 பண்ணின பிறகுதானே அவங்களுக்கு பண்ண முடியும். நீ ஏன் பிடிவாதமா இருக்கேன்னு எவ்வளவு கேட்டும் முதல்ல அவங்காளுக்கெலாம் பண்ணிடுங்க
என்று தீர்மானமா சொல்லிட்டான். அண்ணன் இருக்கும்போது மத்தவங்களுக்கு
எப்படி பண்ணனு யோசிச்சோம். ஆனா தம்பி தங்கை எல்லாரும் சொந்தமுயற்சியில் மேல் படிப்பெல்லாம் படித்து பாம்பேயில் நல்ல வேலையிலும் அமர் ந்துவிட்டிருந்தார்கள் அதுமட்டுமில்லாம லவ்விலும்
 விழுநதுட்டாங்க.வேர வழி இல்லாம முதல்ல இவங்களுக்கெeல்லாம்
 அவங்க விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தோம்.அப்பரமும்
 இவனை இப்படியே விடக்கூடாதுன்னு தீவிரமாக பெண்தேடினோம். மதுரை
யில் இருந்த ஒரு பெண்ணின் ஜாதகம் நன்கு பொருத்தம் இருந்ததால். அதை
பேசி முடிச்சோம்.அவ்னுக்கோ கல்யாணத்தில் விருப்பமே வரலை. அப்படி
யும் எங்க விருப்பத்துக்காக ஒத்துகிட்டான்.

எதிர்காலம்(3)



மஹாராஷ்ட்ரா பேங்க் நாங்க இருக்கும் ஊரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலை
வில் உள்ளடங்கி இருந்தது. ரொம்பவே பட்டிக்காடு. காலை ஒரே ஒரு பஸ் சிட்டி
லேந்து வரும்.அதில்தான் அந்த ஊருக்கு வேண்டிய காய்கறிகள்,பலசரக்கு எல்லாம் வரும். திரும்ப இரவு அந்தபஸ் சிட்டி போயிடும். பேங்கே ஒரு பெட்டிக்கடை அளவுக்கு மிகவும் சின்ன ஒரு ரூமில் தான் இருந்ததுஅந்த ஊரு
 பெயர், அஹேரி(அஹோரிஇல்லைபேர்கூடயாரும்கேள்விபட்டிருக்கமாட்டாங்க
 பேங்கில் மொத்தமே 5 பேர்தான். ஒரு மேனேஜர்,ஒரு கேஷியர், ஒருக்ளர்க்,ஒரு
அட்டெண்டர்,ஒரு ப்யூன். அவ்வளவுதான்.எங்க பையன் முதல் முதலா வீட்டை
 விட்டு எல்லரையும் பிரிஞ்சு தனியா இருக்கப்போரான்.அந்தஊரில் நல்ல
 ஹோட்டலோ, மெஸ்ஸோ எதுவுமே கிடையாது. தனியாதான் சமைச்சு சாப்பிட
நும். நல்ல வேளை அவனுக்கு சமையல் எல்லாம் நல்லாவே தெரியும். அங்க
 அவன் கிளம்பினப்போ, பெட்டியில் அவனுக்கு தேவையான துணிமணிகள்,முக்
யமான சாமான்களுடன்,சமையல் செய்து சாப்பிட ஒரு திரிஸ்டவ், தேவையான
 பாத்திரபண்டங்கள் எல்லாம் ரெடி பண்ணினோம்.

எதிர்காலம்?(2)

எல்லாம் சரி ஆகும்னுசொல்லி அவனை சமாதானப்படுத்தி, எங்க ஊர்லேந்து
50 கிலோமீட்டர் தள்ளி ருந்த ஒரு சிட்டியில் ஒரு இ,என்,டி ஸ்பெஷலிஸ்டிடம்
போய் அவன் காது செக் பண்ணினோம். சின்னதா ஒரு எலும்பு வளந்திருக்கு.
 ஆபரேஷன் பண்ணினா சரி ஆயிடும் என்றார். அதுக்கு ஏற்பாடு பண்ணி ஆபரே
ஷனும் செய்து மூன்றாவது மாசமே அவனுக்கு ரெண்டுகாதுமே நல்லா கேக்க
ஆரம்பிச்சது.திரும்பவும் ஒருவருஷம் வீட்ல உக்கார வேண்டி இருந்தது. பேப்ப
ரில் வரும் பேங்க் வேலைக்கெல்லாம் திரும்பவும் அப்ளை பண்ணிண்டுஇருன்
தான். தம்பி, தங்கைக்குபாடங்கள் சொல்லிக்கொடுத்தான். டிஃபன்ஸ்காலனியிலுள்ள குழந்தைகளுக்கும் ட்யூஷன் மாதிரி பாடங்கள் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். காலனிக்குழந்தைகள்அவங்க
பெற்றோர் எல்லாருக்குமே அவனை ரொம்பவே பிடிக்கும் இவன் பாடம்
சொல்லிக்கொடுக்கதொடங்கியதுமுதல் எல்லா குழந்தைகளுமே நல்லாமார்க்
வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எதிர்காலம்?



நாங்க ஜபல்பூரில் இருக்கும்போது அக்டோபரில் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்து
சந்த்ராபூர் போகும்படி ஆனது. குழந்தைகள் எல்லாரோட ஸ்கூல் திறந்து 5
 மாதம்ஆனநிலையில்ட்ரான்ஸ்பர்.பெரியமகன்11வதுபடித்துக்கொண்டிருந்தன்.
 வீட்டுக்காரர் ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலை. எங்கமாத்தினாலும் பேக்டரி
ஸ்கூலில் இடம் கொடுத்து விடுவார்கள். அதனால எல்லாரையும் கூட்டிண்டு
 கிளம்பினோம்.போன இடத்திலும் அதிக கஷ்டப்படாமல் ச்கூலிலும் சேர்த்து
விட்டோம். ஜபல்பூர் மத்யபிரதேஷ். அங்க ப்யூர் ஹிந்தி மெயி்ன் சப்ஜெட்.
சந்த்ராபூர் மஹாராஷ்ட்ரா. மராட்டி மெய்ன் சப்ஜெட்.. நல்லவேளை குழந்தை
கள் எல்லாருமே நல்லா படிக்கரவங்கதான். 5மாசத்துல ம்ராட்டியும் பிகப்
பண்ணிண்டுவாங்க.






முழுபரீட்சையில் எல்லாருமே 80% க்கு மேலே எடுத்து பாஸ் பண்ணிட்டாங்க.
11-வது படிக்கும் மகன் 88% வாங்கி அந்த ஸ்கூலிலேயேமுதலாவதாகவந்தான்.
அதுவரை எல்லாமே ஸ்மூத்தாகப்போனது. அடுத்த க்ளாஸ் அட்மிஷனுக்காக
இவர் ஸ்கூல் போனப்போ.எல்லாரோடபோனவகுப்பின் மார்க் லிஸ்ட் கேட்டா
இவரும் எல்லாம் சரியாக கொடுத்தார். பாக்கி நாலு பேருக்கும் ஈசியா அடுத்த
க்ளாசுக்கு அட்மிஷன் கொடுத்துட்டா.பெரியவன் டர்ன் வந்தப்போ அவன்10-
வது மார்க் லிஸ்ட், 11, மார்க் லிஸ்ட் எல்லாம் பாத்துட்டு, வெரி,க்ளவர் பாய்
என்றுசொல்லிட்டு, சார் 10-வது ஸ்கூல் மார்க் லிஸ்ட்னா இருக்கு. போர்ட்
எக்சாம் கொடுக்கலையா? என்றார்.




இல்லை இவ்வளவு நாள் ஜபல்பூர்ல படிச்சான். இப்ப இங்கவந்து 5-மாசம்தான்
ஆகுது என்றார். ஓ.ஜபல்பூர்னா அது எம்,பி, ஸ்டேட் இல்லியோ?அங்கெல்லாம்
11-வதுன்னா S.S,C போர்ட் எக்சாம். ஏன்பாதில இங்க கூட்டி வந்தீங்க? இங்க
அதாவது மஹாராஷ்ட்ராவில் 10+2-ஸிஸ்டம். 10-வது போர்ட் எக்சாம் எழுதி
இருந்தாதான் 12-வது போர்ட் எழ்தமுடியும்.இல்லைனா 11-வதாவது போர்ட்
எழுதி இருக்கணும். இப்ப 12-வதுக்கு அட்மிஷன் கொடுக்கமுடியாது.ஒன்னு
இங்க10படிச்சுபோர்ட்எழுதசொல்லுங்க.வேரவழியேஇல்லைன்னுசொல்லிட்டர். எங்களுக்கு ரொம்ப டெஷன் ஆச்சு.எப்படியும் 10-வது போர்ட் எழுதித்தான்
ஆகணும் என்று ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா நாங்க என்ன செய்ய. எங்களுக்கும்
எம்,பி, யில் 11 போர்ட்,மஹாராட்ராவில் 10+2 ஸிஸ்டம் என்பதெல்லாம் முத
லிலேயே தெரிந்திருக்கலை.




பையனிடம் சொன்னோம். அவன் ரொம்பவே அப்செட் ஆனான். என்னப்பா
இப்படி சொல்லராங்க? 11-ல பெயிலானாகூட திரும்ப 11 தான் படிக்க சொல்வாங்க. ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வந்துட்டு ஒருக்ளாஸ் கம்மியா படிக்கனுமா? என்கூட படிச்சவங்கல்லாம் 12 போவாங்க நான் 10-வதா? எப்படிப்பான்னு
ஓன்னு ஒரேஅழுகை. அவனை சமாதானப்படுத்தவே முடியலை.எனக்கு
ரொம்ப ஷேமா இருக்குப்பான்னு சொல்லிண்டே இருந்தான். வேர என்னதான்
 பண்ணமுடியும் மாறி, மாறி அவனை சமாதானப்படுத்தி 10-வது அட்மிஷன் வாங்கி நோம். ஃப்யூச்ச்ர்க்கு அதுதான் சரியா இர்க்கும்.எப்படியோ ஒழுங்கா
ஸ்கூல் போய் வந்தான்.ஆனா அவன் சந்தோஷமே கானாம ப்போயிடுத்து.




மராட்டிவேறு ரொம்ப தொந்தரவு கொடுத்தது. அப்படியும் 10-வது ரிசல்ட் வந்த
போது95% வாங்கினான். எங்களுக்கும் நல்ல திருப்தியே.ஸ்கூலிலும் நல்ல
பாராட்டுக்கள்.இப்போ திரும்பவும்11, அப்பரம் 12, படிக்கணும். எவ்வளவு வருஷம் வேஸ்ட். மனசளவுல எவ்வளவு அப்செட்.15, 16, வயசில் இருக்கும்
ஒரு டீன் ஏஜ் பையனுக்கு மனசுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்? நல்ல
 வளர்ப்பு, நல்ல பையனாக இருந்ததால் நல்ல மார்க் எடுத்துட்டான். அப்பரம்
அடுத்தக்ளாசுக்கு அட்மிஷன் வாங்க வேண்டாம்னுட்டான். எங்களுக்கு
அதிர்ச்சி. என்னடா இப்படி சொல்ராய்.என்ரால் இல்லைப்பா எனக்கு படிப்பு
மேலயே வறுப்பா இருக்கு. உங்க ஆபீசில் வேலை வாங்கி தாங்க, நான் இனி
 வேலைக்குப்போரே.இனிமேலபடிக்கமாட்டேன்னுதீர்மானமாசொல்லிட்டான்.




என்னடா இப்படி சொல்ராய் படிப்புதான் உனெதிர்காலதுக்கு நல்லது.படிக்க
மாட்டேன்னுல்லாம் சொல்லாதேன்னு எவ்வள்வோ நல்லதனமா சொல்லிப்
பாத்தும் அவன் கேக்கவே ரெடி இல்லை. அவன் இவ்வளவு பிடிவாதமாஇருக்
 கான்னா, அவனுக்கு கிடைத்த அனுபவம் அவனை அப்படிநினைக்கவச்சுடுத்து.
சரின்னு ஆபீசில் அப்ரெண்டீசுக்காக ஏற்பாடு பண்ணினார்.அதுக்கும் ரிட்டர்ன்
டெஸ்ட், இண்டர்வ்யு எல்லாம் வைத்து, திறமை இருந்தால் தான் சேர்த்துக்
 கொள்வார்கள். டெஸ்ட்ல எல்லாமே டாப் மோஸ்டா பாஸ் பண்ணிட்டான்.
மொத்தம் அவன்கூட 8 பையன்கள் இண்டெர்வ்யு செய்து அப்ரெண்டீசாக செலக்ட் ஆனார்கள். மத்தபசங்களுக்கு 3- வருஷம் கோர்ஸ். இவன் நல்லா
 பெர்ஃபார்ம் பண்ணினதால மில்ரைட் செக்‌ஷனில் 4 வருஷ கோர்ஸ் கொடுத்
தார்கள்.




வேலைக்கும் விருப்பமாகவே போய்வந்தான் ,ஸ்டைஃப்ண்ட்250 கொடுத்தா.
ஒரே ஆபீசில் அப்பா ஆபீசர், பையன ஒர்க்கர். காக்கி ட்ரெஸ்ஸில் மகன்
ஏழே கால் சங்கு ஊதினதும் சைக்கிளில் கிளம்பிடுவன். கயில் லஞ்ச் 7, 8,
சப்பாத்தி,பாஜி கட்டிக்கொடுப்பேன். இவர் 8 மணிக்கு ஸ்கூட்டரில் போவார்.
 12-மணிக்கு கேரியர்வாலா வந்து இவருக்கு லஞ்ச் கொண்டு போவான்.
 இப்படி அமைதியா 3 வருஷம் போச்சூ. 3 வருஷம் முடித்த அப்ரெண்டிஸ்
பையன்களுக்கு சூப்பர்வைசராக ஆபிசிலேயே வேலைக்கு எடுத்துக் கொண்ட
னர். ஆபீசிலேயே ஒரு ரூல் இருந்தது. அப்ரெண்டீஸ் களை அங்கியே வேலைக்க்கு எடுத்துக்கணும் என்று. இவனோடு 4 வருஷமும் முடிந்தது.
அந்தவருஷம் பாத்து அந்தரூல் கேன்சல் ஆயிடுத்து.




இவனை ஆபீசில் வேலைக்கு எடுத்துக்கலை. மில்ரைட் கொஞ்சம் உசத்தியான
 கோர்ஸ். சின்சியரா வேலை பார்த்தும் ஆபீசில வேலை இல்லைன்னுட்டாங்க.
 என்னன்னு சொல்ல.இவனுக்கு ஏன் இப்படிஎல்லாத்லயும்தடங்கல்ஆயிண்டே
இருக்குன்னு எஙகளுக்கெல்லாம் ரொம்பவேமனசுக்கு பாரமா இருந்தது.
 அவன் மனசு என்னபாடு பட்டிருக்கும்? ஒரு வருஷம் வீட்ல சும்மாவே இருந்தான். எனக்கு ஹெல்ப்பா சமையல் முதல் வீட்டு வேலை கள் எல்லாமும் செய்து தருவான். அந்த காலகட்டத்தில் பேங்க் க்ளர்க் வேலைக்கு
10- வதே போதுமான க்வாலிபிகேஷனாக இருந்தது.கண்ணீல்படும் வேலைக்கு
எல்லாம் அப்ளை பண்ணிண்டு இருந்தான்.ஒருவருஷத்திற்குப்பிறகு ஸ்டேட்
 பேங்கிலிருந்துஇண்டெர்வ்யு கார்ட் வந்தது. நாக்பூர் போயி இண்டர்வ்யூ
அட்டென் பண்ணிட்டு வந்தான்.




அதில் செலக்ட் ஆகி ஹெல்த் செக் அப்புக்கு ஒரு நாள் கூப்பிட்டா. எல்லாம்
 ஆச்சு இனி வேலைக்கு சேரும் ஆர்டர்தான் வரணும்னு குஷியா இருந்தான்.
ஹெல்த் செக்கப் ஆனதும் ஒரு பேப்பரில் அவனையே ஃபில் அப் பண்ணி
தரசொல்லி இருக்கா. என்குழந்தைகள் யாருமே எதுக்காகவும் பொய்யே
பேசமாட்டா. ஹெல்த் பேப்பரில் எனக்கு ஒருகாதுல கொஞ்சம் டிஃப்க்ட்
இருக்குன்னு சின்சிய்ரா எழுதிக்கொடுத்திருக்கான்.உன்மையில் ஒருகாது
கொஞ்சம் கம்மியாதான் கேக்கும்.அவனுக்கு. அந்தபேப்பரைப்பார்த்த பெரிய
ஆபீசர் பேங்க் உத்யோகத்துக்கு உடம்புல எல்லா பார்ட்டும் பர்ஃபெக்டா இருக்
கணும். அதுவும் மெயினாகாதும் கண்ணும்குறையில்லாம இருக்கணும்.
 எல்லா டெஸ்டிலும் பாசாயிட்டு ஹெல்த் செக் அப்பில் ரிஜெக்ட் பண்ண
 வேண்டியிருக்கு சாரின்னு சொல்லிட்டா.




வீட்டுக்குவந்து ஒரே அழுகை எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு
 விசும்பி, விசும்பி அழரான்.எப்படி அவனை சமாதானப்படுத்துவதுன்னே தெரியலை.

புண்ணிய ஷேத்திரம்???!!!!(காசி)

இதுவும் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம்தான். நாங்க அப்போ சந்த்ரபூரில் இருந்தோம். என் அப்பா, அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தாங்க.
கடசி தங்கையின் கல்யாணம் கூடி வரலியென்னு ரொம்ப கவலையில் இருந்தாங்க.ஊர்லயே ஒரு ஜோசியரிடம் கேட்டாதுக்கு, அவர் காசி யாத்திரை
போய் வாங்க எல்லாம் நல்ல படி ஆகும்னு சொல்லியிருக்கார். அம்மா என்னிடம்
 சொன்னா. நான் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.அவருக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. என் தங்கை தம்பிகளை அவர் கூடப்பிறந்தவங்களாகவே நினைக்கும் பெரிய மனசு அவருக்கு. அதுக்கென்ன
 போனாப்போச்சுன்னு சொன்னார்.

ஹெல்த் கேர்(3)



ஆஸ்பிடலில் இருந்து எப்படா வீட்டுக்கு போலாம்னு ஆச்சு.ஸ்பெஷல் வார்ட் 

வந்ததும் டாக்டர் வேர பெரிய ஆஸ்பிடல் போயி ஆஞ்சியோ டெஸ்ட் எடுக்க

சொன்னார். நான் கேட்டேன் அதனால என்னாகும் என்று.இல்லைமா 

எங்கல்லாம் ப்ளட் க்ளாட் ஆகிஇருக்குன்னுதெரியவரும்அதுக்குத்ததகுந்தாப்ல

ஆஞ்சியோ ப்ளாஸ்டோ பைபாஸொ பண்ணிடலாமென்றார். அது எதுக்குன்னு

திரும்பவும் கேட்டேன். என்னம்மா இப்படி கேக்குரீங்க. ரெண்டு அட்டாக் ஒரே 

சம்யம் ஆகி அதிர்ஷ்ட வசமா நல்லபடியா பிழைச்சு வந்திருக்கீங்க.ஹார்ட் 

ரொம்ப வீக்கா இருக்கு. இந்தகண்டிஷன்ல இன்னும் ஒரு 5 வருஷம்தான் நீங்க

உசிரோட இருக்க முடியும். பைபாஸ் பண்ணிகிட்டா கூட் ஒரு 10 வருஷம் 

இருப்பீங்க என்றார். அப்போ இவ்வளவு மருந்து மாத்திரை எல்லாம் தேவை

இல்லியான்னேன். டாக்டர் சிரிச்சுகிட்டே இன்னமும் கூடவே மருந்து 

மாத்திரைஎடுத்துக்க வேண்டி வரும் என்றார்.


ஹெல்த் கேர்.(2)



வாச்மேன் இண்டெர்காமில் தகவல் சொன்னான். மருமகள் கீழே வந்து என்னைலிஃப்டில் வீட்டுக்கு கூட்டிப்போனா.மகன் ஆபீஸ்வேலை விஷயமாக அன்றுகாலைதான் டில்லி போன்னானாம். மருமகளும் குழந்தைகளும் வேலைக்காரிகளுமே வீட்டில் இருந்தார்கள்.சமையல் முதல் எல்லா வேலைகளுக்குமே வேலைக்காரிகள் இருந்தார்கள். மருமகள் உடனே ஃபேமிலிடாக்டருக்கு போன் பண்ணி விபரம் சொன்னா. அவரும் உடனே, இவங்களைஉடனே லோக்(பெரிய ஆஸ்பிடல்) கூட்டிப்பொங்கன்னு சொன்னார்.அங்க எல்லாவற்றுக்குமே ஸ்பெஷலிஸ்ட் இருப்பாங்க.

ஹெல்த் கேர்.

ரெண்டு வருடம் முன் ஒரு ஜூலை மாதம் வழக்கம்போல மார்னிங்க் வாக்,
யோகா மெடிடேஷன்,பிராணாயாமம் எல்லாம் செய்து முடிந்ததும் கொஞ்சம்
ஒரு 5 நிமிடத்துக்கு ரிலாக்ஸ் பண்ணிண்டேன்.10 வருஷமாகவே இதெல்லாம்
 ரெகுலராக செய்து வரேன். கோவம் என்பதே கிடையாது. கவலையோ, டென்ஷனோஎதுக்குமே படுவதில்லை. ரொம்பவே சாந்தமுடன் அமைதியாக
இருப்பேன். அன்று காலை உக்காந்திருக்கும்போதே திடீர்னு கீழ்த்தாடை பக்கம்
 லேசாக ஒரு வலி தொடங்கியது.ஏன் இப்படி வலிக்குதுன்னு யோசிக்கும்போதே
தலை முதல் கால்வரை வேத்து கொட்டித்து. முகம் அலம்பி டவல் எடுக்க பெட்
ரூம் போனேன்,அவ்வளவுதான் தெரியும். நினைவே இல்லாம ஒரு மணி நேரம்
 கீழே விழுந்திருக்கேன்.

சடன்னா எழுந்து பாத்தா ஒருமணி நேரமா நினைவே இல்லாம விழுந்திருப்பது
தெரிய வந்தது.டவல் கொண்டு முகம் துடைத்தபிறகு கூட வேர்வை நிக்கவே
 இல்லை. திடீர்னு கழுத்தை சுத்தி பின்கழுத்துபக்கம்னு வலிசிவியரா ஆச்சு.
 நிக்கக்கூட முடியாம உடம்பு நடுக்கம் வேர. நான் தனியாகதான் இருக்கேன்.
 நான் இருக்கும் இடத்தில் டாக்டர் வசதியெல்லாம் போறாது. கொஞ்ச நேரம்
 மனதை அமைதி படுத்திண்டு, நமக்கு ஒன்னுமில்லை, ஒன்னுமில்லைன்னு
ஆட்டோசஜ்ஜஷன் மாதிரி சொல்லிண்டே உக்காந்தேன். அப்படியும் எந்த முன்
நேற்றமும் இல்லை. சரி இது சரியா தோணலியேன்னு எனக்குத்தெரிந்த ஒரு
ஆட்டோக்காரப்பையனை போன் பண்ணி வரச்சொன்னேன். உடனே வந்தான்.
 என்னாச்சும்மா? என்றான். இப்பவே என்பையன் வீடு கூட்டீபோயி விடு என்றேன்.

 நான் இருக்கும் இடத்திலேந்த பையன் இருக்கும் இடம் 40 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோக்காரப்பையன் ரொம்ப நல்ல மாதிரி, என்கண்டிஷன் பார்த்து
அவனே பயந்து போனான். நான் இருப்பது மூணாவது மாடி.என்னை மெதுவாக
 கையைப்பிடித்துக்கொண்டு கீழே கூட்டிண்டு போய் ஆட்டோவில் உக்கார வைத்தான்.எ ன்னால உக்காரவே முடியலை. படுத்துட்டேன். கூடியமான வரை
மேடு, பள்ளம் பார்த்துகவனமாகவே ஓட்டிண்டு போனான்.ஒண்ணரை மணி
 நேரம் ஆச்சு. அவங்க இருப்பது சிட்டி சைட். எல்லா வீடுகளிலும் லிஃப்ட் உண்டு.
 எனக்கு ஆட்டோலேந்து இற்ங்கவே முடியலை.


பெட் அனிமல்(4)எண்ட்.



பெட் அனிமல்(4)எண்ட்






ஒரு அவசர வேலை விஷயமா நாங்க இருவரும் கிராமத்துக்குப்போக வேண்டி வந்தது.பெரியபொண்ணு படிப்பு முடிந்து வீட்லதான் இருந்தா. அவளிடம் சமைத்துப்போடச்சொல்லிகுழந்தைகள், வீட்டையும் பாத்துக்கச்சொல்லிட்டு நாங்க ஒருவாரத்துக்கு ஊருக்குப்போயிட்டுவேலைகள் முடிந்து ஒரு நாள் சாயந்தரம் வீடுவந்தோம். அன்றும் ஒரு ஜனவரி26-ம் தேதி.

பெட் அனிமல்(3)

பெட் அனிமல்(3)

அடுத்த நாள் முதல் ப்ளாக்கிக்கு சின்னபையன் ட்ரைனிங்க் கொடுத்தான். காலை அவன் குளிக்கப்போகும்போது அதயும் பாத்ரூம் கூட்டிப்போவான்.
அது நாலுகாலையும் தரையில் டைட்டாக ஊனிண்டு ஸ்ட்ரைக் பண்ணும். குளிக்க பிடிக்காது.பையன் விடுவனா? தாஜா பண்ணி உள்ள கூட்டிண்டு
போயி அதுக்குனு தனியா வாங்கின சோப்பு போட்டு,ஷவர்ல குளிப்பாட்டி, அதுக்கு வாங்கின தனி டவலால துடைச்சு விட்டு மொட்டை மாடில கொண்டு
கட்டிப்போட்டு காய விட்டுட்டு அப்பரமா அவன் குளித்துவருவன். அன்று சாயந்தரம் கடைகளில் தேடி பிடிச்சு, நாய்க்கு கழுத்துபட்டி, வாக்கிங்க் கூட்டிப்
போக பெரிய செயின் எல்லாம் இவர் வாங்கி வந்தார்.மொட்டைமாடிலேந்து ப்ளாக்கியைகூட்டிவந்து எல்லாருடனும் டிபன் சாப்பிட வைத்துஅதுகூட விளை
யாடி, கழுத்துபட்டையும் செயினும் அதனிடம் காட்டி, ப்ளாக்கி நீ சமத்தா இருந்தா சாயங்காலம் வாக்கிங்க் கூட்டிண்டு போவேன் வீட்ல சமத்தா இருக்கனம்

பெட் அனிமல்(2)

பெட் அனிமல்(2)


இரவு12மணிக்கு, சின்னப்பையன் எல்லாருக்கும் ஜீனி கொடுத்து, இன்னிக்கு நம் வீட்டுக்கு புதுவரவு வந்திருக்கு,அதைக்கொண்டாட வேண்டாமா? அதுதான் எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கரேன்.என்று சொல்லி குட்டி நாய்க்கு
என்ன பேரு வைஇக்கலாம்னு என் 5 குட்டிகளும் டிஸ்கஸ் பண்ணினார்கள்.ஆளுக்கு ஒருபெயர் சொன்னார்கள்.கடைசியில் சின்னப்பையன் ப்ளாக்கின்னு பேர் வச்சான். முதல் பையனோ, ஏண்டா இது ப்ரௌன்&அழுக்கு
கலர்ல இருக்கு. ப்ரௌனின்னு பேரு வைக்கலாம்டான்னான். இல்லைடா, ப்ளாக்கி தான் நல்லா இருக்குடாஎன்றான். எல்லாரும் முழு மனதாக ப்ளாக்கியை ஏற்றுக்கொண்டார்கள்.1-மணிக்கு ப்ளாக்கியை வராண்டா
வில் படுக்கவைத்து தாலாட்டு மட்டும்தான் பாடலை. அவரவர்கள் தூங்கப்போனார்கள். அப்பா, குழந்தைகள் எல்லாருமே காலை 7-மணிக்கு கிளம்பனும். நாந்தினசரி காலை 5-மணிக்கு எழுந்தால் தான் எல்லாருக்கும்
ப்ரேக்ஃபாஸ்ட் ரெடிசெய்யமுடியும். அன்றும் அதுபோலவே 5-மணிக்கு எழுந்தேன். நான் வரும் சத்தம் கேட்டுப்ளாக்கியும் பின்னாடியே வந்தது.

பெட் அனிமல்(1)

பெட் அனிமல்.


நாங்க, ஜபல்பூரில் 5 வருடம் இருந்தோம். அங்க ஒரு குட்டி நாய் வளர்த்தோம்.
ஒரு 26-ஜனவரி அன்று ஒரு ஃப்ரெண்ட் வீடு போயிருந்தோம். அவ்ங்களும் தமிழ்க்காரங்கதான்.அவங்க இருந்தது. தனி வீடு. ரொம்ப பெரியவீடு. பின்புறம் பெரியதோட்டம் முன்புறமும் பூச்செடிகள் வைக்கும்படி தாராளமாக காலி இடங்கள்.நாங்க இருந்தது முதல் மாடி. எல்லாருமே ஆபீஸ் குவார்ட்டர்சில் தானிருந்தோம்.பதவிக்குத்தகுந்த வீடு. ஜபல்பூரிலிருந்து,30, 40 கிலோ மீட்டர்

நாராயன்பூர்(3)


                                                       
நாராயனேஸ்வர்(3)

கூட வந்த ஒரு பக்தர் முகுந்தன்னு பேரு. அவர் வீட்டில் எல்லாருக்கும்
மதிய சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார். நேரா பூனாவில் ஸ்வார்கேட்
என்னுமிடத்தில் உள்ள முகுந்த் நகர்(குல்டேக்டி) அவர் வீடு போனோம்.
சுற்றிவர பசுமையான மரங்கள் சூழ்ந்த குளுமையுடன் இருந்தது விஸ்தார
மான வீடு. வாசலில் பெரிய பந்தல் போட்டு 20. 30 சேர்கள் போட்டிருந்தார்கள்.
நாங்கள் எல்லாரும் போனதும் அவர்கள் வீட்டுப்பெண்கள் சிரித்த முகத்துடன்
இனிமையான வரவேற்பு கொடுத்தார்கள். பெரிசும், சிறிசுமாக ரெண்டு நாய்கள்
இருந்தது. பெரிய நாய் எங்களைக்கூட்டமாகக்கண்டதும் குலைக்க ஆரம்பித்தது.

நாராயன்பூர்(2)



நாரயன்பூர்(2)                          

ஷிவ்பூர் டோல்கேட் தாண்டியதும் சிறிது நேரத்தில் பூனா எல்லை வந்தது.
11 மணி கோவில் வாசலில் இருந்தோம். பூனா மண்ணில் காலடி வைத்ததும்
உடம்பு, மனது பூராவும் ஒரு சிலிர்ப்பு. 15 வருடங்கள் வாழ்ந்த ஊர். வாழ்க்கை
தொடங்கியதே இங்குதான். சிரிப்பும், சந்தோஷமும், சோகமும் துக்கமும் என்றுகலந்துகட்டி அனுபவங்களைத்தந்த ஊர். அந்த உணர்வுகள் எல்லாம் மனதில்தோன்றி கண்களில் கண்ணீரைத்தேக்கி விட்டது.மற்றவர்கள் பார்த்தா என்னாச்சுன்னு கேப்பார்களென்னு கண்ணிரைக்காட்டாமல் இரிக்க ரொம்ப சிரமப்பட்டேன்.பூனாவை விட்டு இப்ப 35- வருடங்களுக்கு மேலேயே ஆச்சு. ஆனாலும் கூட நம்மனதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி இருக்கு.

நாராயன்பூர்(1)




நாராயன்பூர்

       குருஸ்வாமி& மனைவி   


பொங்கல் கழிந்து மறு நாள் நாங்கள் ஒரு 35 பேர்கள் மும்பை தாணாவிலிருந்து

ஒரு லக்சரி பஸ்ஸில் கிளம்பி பூனாவில் இருக்கும் நாராயன்பூரிலுள்ள பாலாஜிகோவில்போய்வந்தோம். என்மகன் வருடா வருடம்சபரிமலை செல்லும் வழக்கம்உள்ளவன். அந்த குருஸ்வாமி தான் இந்த ஏற்ப்பாட்டைச்செய்திருந்தார்.கரெக்டாககாலை5.30-க்கு வீட்டை விட்டுக்கிளம்பி, பிருந்தாவன் என்னும் இடம் போனோம்.

M. P. TO M. S.(3)






mp to ms(3)




சுமாராக 20 பேர்கள் இருந்தோம். அத்தனைபேருக்கும் சூடாகவும் சுவையாகவும்

2 மணி நேரத்தில் சாப்பாடு ரெடி பண்ணிட்டா.பஞ்சாப் கோதுமை போல இருக்கு

அவ்வளவு ருசியாக இருந்தது ஒவ்வொருகட்டிலிலும் 5, 5 பேராகஉக்காந்தோம்.

m.p. to m. s.(2)

                         mp  to  ms.(2)

   நாங்க இருந்தது  ஜபல்பூரிலிருந்து50- கிலோ மீட்டர் உள்ளே
  தள்ளி இருந்த கமேரியா என்னுமிடம். காலை12மணிக்கு ட்ரக்
  கிளம்பியது. சாப் இன்னிக்கு முதல் நாள் இல்லியா சிட்டிவரை
  முதல்ல போயிடலாம். அங்கபோன பிறகு ஒரு தாபா போலாம்.
   உள்ளே இஞ்சின் உள் புறமாக இருந்தது. நல்ல தகர மூடியால மூடி
   தான் இருந்தது. க்ளீனர் 15 நிமிஷ்த்துக்கு ஒருமுறை கனத்த சாக்கை
   தண்ணீரில் நனைத்து நல்ல ஈரமுடன் அந்த  இஞ்சினின் மூடி மேல
  போட்டுண்டே தான் இருன்தான். ஆனால் கூட வெப்பமும் சூடும் ரொம்ப
   அதிகமாவேதான் இருந்தது. குழந்தைகளுக்கு இதுபுதுவித பிரயாணமாக
  இருக்கவே மேலே தாளம் போட்டு பாடிண்டு நல்லா எஞ்சாய் பண்ணினா.
  நாங்களுமே முதல் முறையா ட்ரக் பயணம்தான்.

M. P. TO M. S.

m p to m s

தலைப்பைப்பார்த்தால் எதுவுமே புரியலையா?:)
மத்யபிரதேசத்திலிருந்து மஹாரஷ்ட்ரா. இதுதான்.
என் வீட்டுக்காரர் செண்ட்ரல் கவர்மெ ண்டில் வேலை பார்ப்பதால்
5- வருடத்தில் வேறு, வேறு ஊர் மாற்றி விடுவார்கள். போய்த்தான்
ஆகணும். குழந்தைகளுக்கு ஸ்கூலில் ஃபைனல் எக்சாம் முடிந்ததும்
கிளம்பும்படி இருக்கும். அதுபோல அந்த வருடமும் மாற்றல் வந்தது.
அதுல ஒரு சிக்கல் என்னன்னா, வக்கேஷன் டைம்ல ட்ரெயின், பஸ்
எல்லாமே ஃபுல் ஆயிடும். எதிலுமே டிக்கட் கிடைக்காது. அந்த தடவை
யும் அப்படியே.என்னபண்றதுன்னு ரொம்ப யோசிச்சோம். சாமான்களை
எல்லாம் அனுப்ப ஒரு ட்ரக் புக் பண்ணி இருந்தோம். அhந்த ட்ரைவரிடம்
ரிக்வெஸ்ட் பண்ணி, எங்களையும் ட்ரக்ல கூட்டிண்டு போகமுடியுமா.?

பரணீயம்(6, எண்ட்)

பரணீயம் 6




வெளில தள்ளித்தெரிந்த சிகப்பு புள்ளி நாங்க இருக்கும் இடம் தேடி வருவதுபோல

ரொம்பவே ந்ருங்கி வந்தது. உமாவும் நானும் வெளியில்பாக்காம ஒருவரை ஒருவர்

பாத்துண்டு சுவற்றைப்பார்த்தபடி உக்காந்துண்டு என்னமோ பேசிண்டொம். கொஞ்ச

நேரத்ல ம்க்ம் என்று எங்க பின்னடிலேந்து ஒருகனைப்புசத்தம்.திடுகிட்டு திரும்பி

பாத்தோம். வைத்தியர் வாயiில் பீடியுடன் நின்று கொண்டிருந்தார். பக்கத்ல உள்ள

வங்க காலி பண்ணிட்டு போயாச்சே, நீங்க இருவரும் தனியா இருப்பீங்களே,லைட்டு

வேர போச்சேன்னு உங்களுக்கு கொஞ்ச நேரம் துணையா இருக்கலாம்னு வhந்தேன்னு

சிரிச்சுகிட்டே சொல்ரார்.எங்களுக்கு பயம் போயி சிரிப்புதான் வhந்தது.இப்படியா சத்தம்

போடாம வருவீங்க நாங்க ஒரு நிமிஷம் ஆடிப்போனோம் தெரியுமோன்னு உமா அவரிடம்

சத்தம் போட ஆரம்பிச்சுட்டா.அவர் இன்னும் பெரிசா சிரிச்சு ஏன்ன் என்னை கொள்ளிவாய்ப்

பிச்சாசுன்னு நினைச்சீங்களான்னு கேட்டு இன்னமும்பெரிசா சிரிக்கரார்.




ஆனாலும் மாமியாருக்கும், மறு மகளுக்கும் தைரியம் ஜாஜ்திதான்னு வேர சொல்ரார்.

கரண்ட் வந்ததும் அவர் கிளம்பி போனார். நாங்க சாப்பிட்டு 10 மணிக்கு உள்ள போனோம்.

இரவும்,அடுத்தைரண்டு நாட்களும்கூட இப்படியேதான் போச்சு.வழக்கமான எண்ணைக்குளியல்

சூப்பரா வாக்கிங்க் உக்காந்த இடத்தில் சூடு, சூடா நல்ல ருசியான சாப்பாடுன்னு போயிண்டு

இருக்கு. நல்ல ஒரு அனுபவம் கிடைச்சுண்டு இருக்கு. நல்லா ரசிச்சுண்டு இருக்கேன்.

அடுத்த நாள் டிஸ் சார்ஜ் ஆகணும். அப்பாடான்னு இருந்தது. நானும் தேங்கா நாரை

ஸாஃப்ட் பண்ணிண்டேன். என்னால் வெட்டவெளிலல்லாம் குளிக்க முடியாது. டாய்லெட்

ரூம்லகுளிக்கரேன்னு உமா விடம் சொன்னேன். இருங்கோ அங்க ஒரு ரூம்ல விறகு அடுப்பு

அலுமினியகுண்டான் எல்லாம் இருக்கு வென்னீர் போட்டுத்தரேன்னா.




குண்டான்லதண்ணி பிடிச்சு விறகடுப்பை ஏத்த தெரியாம கண்ணும் மூக்கும் சிவக்க அடுப்பு

ஊதி,ஊதி ஒருவழியா அடுப்பை பத்தவச்சுட்டா. குண்டானை அடுப்பில் ஏத்தினா அடுப்பு அணைஞ்சு

அணைஞ்சு போயிண்டே இருந்தது. முதல்ல காரணமே தெரியலை. அப்பரம் பாத்தா குண்டான் ஓட்டை

அதிலேந்து தண்ணி லீக் அடிச்சு அடுப்பில் விழுந்து அடுப்பை அணைக்குது. கொஞ்சம் புளி எடுத்து

பானையின் ஓட்டை அடைத்து வென்னீர்போட்டுட்டா.ரெண்டு ப்ளாஸ்டிக் பக்கெட்களில் கலந்து

தெங்கா நாரால் தேய்த்து குளியல். குடிக்க, குளிக்க வென்னீர்தான் என்று சொல்லிட்டார்.

அப்பாடா கொஞ்சமே கொஞம் ஃப்ரெஷ் ஆனேன். புடவை போட்டுண்டு வைத்யரிடம் போயி

பண விஷயம் செட்டில் பண்ணினோம். ரூமிற்கு ஒரு நாள் வாடகை 50 ரூபாதான்.

வீட்டுக்குப்போனாலும் தொடர்ந்து3 மாசம் குறைந்தது ரெண்டு நேரமும் உடம்பு பூரா வும்

எண்ணை தேய்ச்சுக்கணம். பத்தியம்னு ஏதும் கிடையாது. உங்க வயசு+ ப்றாப்ளம் ரொம்ப

வருஷமா இருக்கு.அதனால குணம் தெரிய டைம் எடுக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க

என்றார்.3 மாசத்துக்குண்டான 3 பாட்டில் எண்ணையும் தந்தார். காலி ஆயிடுத்துன்னா தெரிய

படுத்துங்க கூரியரில் அனுப்பி வைக்கிரேன் என்றார்.எண்ணைக்கு விலை அதிகம் தான்.




ஆனா கொடுக்கலாம்.எண்ணை தயார் செய்வதில் எத்தனை பேரின் உழைப்புகலந்திருக்கு.

வலி என்று வருகிரவர்களின் வலிகுறைக்கத்தானே இவர்கள் இவ்வளவு பாடு படுகிரார்கள்.

மத்யானம் என்மகன் கால்டாக்சி கொண்டு வந்தான்.கிளம்பியாச்சு. மிகவும் சாந்தமான

அமைதியான இடம். நம் வீடு போயாச்சுன்னா,இருக்கவே இருக்கு, மிஷின்லைஃப்.

50, 55 வயதில் வந்திருக்க வேண்டியது. குடும்ப பொறுப்புகளிலிருந்து விடுபட்டு இங்க

வர இப்பதான் முடிந்தது.அது டூ லேட்




இந்தபதிவு படிக்கத்தொடங்கியதிலிருந்தேஎல்லாருமே வலி குறைந்ததான்னுதான் கேட்டார்கள்.

சரியா சொல்லணும்னா 100% ரிலீஃப் கிடைக்கலைதான். ஆனா நல்ல அனுபவங்கள் நிறையவே

கிடைத்து அதை உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பரணீயம்(5)

பரணீயம்(5)

                                               


மறு நா காலையும் அதேபோல வைத்தியர் நல்ல ஒவ்வொருவருக்கும்

அழுத்தி, அழுத்தி எண்ணை மாலிஷ் பண்ணிவிட்டார். என்னிடம் என்னாச்சு

இன்னும் வலி தொடங்கலியா? எனக்கே ஆச்சரியமா இருக்கு. 24 மணி

நேரத்ல எண்ணை தன் வேலையைக்காட்ட தொடங்கிடுமே. உன்விஷயத்ல

ஏன் இப்படி ஆகுது? உனக்கு காங்கை சரீரமான்னு கேட்டார். ஆமா எனக்கு

காங்கை சரீரம்தான். உடம்பு எப்பவுமே சூடா தான் இருக்கும். என்ரென்.

ஆங்க்!!!!!!!!!1 அதனாலதான் இப்படி ஆகுதுன்னார். அப்ப எனக்கு சரி ஆகவே

ஆகாதான்னு கேட்டேன். அது எப்படி சரி ஆகாமப்போகும்.னான் விட்டிடிவேனா?
Related Posts Plugin for WordPress, Blogger...