Pages

Back to Top

just for fun

ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.

காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.

இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்

ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.

காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக




(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லிதோட்டத்தில்

கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.




குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.

மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்

நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,

டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.

தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு

கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.

தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.

அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்

கியாரண்டி.

கேஸ் சிலிண்டருக்கும் கியாரண்டி உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.. தெரியாதவர்களுக்காக இந்த தகவல்கள்.
சிலிண்டரை மேலே இருக்கும் கைப்பிடிவளையத்துடன் இணைப்பதற்காக மூன்ரு இரும்பு பட்டைகள் வைத்திருப்பார்கள்.அதில் ஒவ்வொரு பட்டையிலும் ஏ, பி, சி, டி என நான்கு எழுத்துகளில்  ஏதாவது ஒன்றுடன் இரண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஏ-ஜனவரிமுதல் மார்ச்வரை,

பி-ஏப்ரல் முதல் ஜூன் வரை

சி-ஜூலை முதல் செப்டம்பர் வரை

டி-அக்டோபர் முதல் டிசம்பர் வரை

என அந்த எழுத்துக்கள் மூன்று மாதங்களைக்குறிக்கும்.
அதிலிருக்குமெண்கள் வருடத்தைக்குறிக்கும். இதுதான்
 சிலிண்டரின் கியாரண்டி காலம்.
 நாம் தெரிந்து கொண்ட நல்ல விஷயங்களைதெரியாதவர்களுக்கு தெரியவைப்பதும் நல்ல விஷயம்தானே.


நண்பரின் பிறந்த நாள்


                           
இவர் எனக்கு சமீபத்தில் கிடைத்த புதிய  மிகவும் அன்பான நண்பர். இன்று இவரின் 25-வது பிறந்ததினத்தை சந்தோஷமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.அந்த சந்தோஷத்தை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன். என்னுடன் சேர்ந்து அனைவரும் அவரை வாழ்த்தலாம் வாங்க.பிறந்த நாள் பரிசாக என்ன கொடுப்பதுன்னு ரொம்ப நேரம் யோசித்தேன். அவர் இருப்பது பெண்களூரில்,(ஹா ஹா) நான் மும்பையில். முகம் தெரியாத நண்பர்களின் வாழ்த்துக்களை
 விட சிறப்பான பரிசாக எதைக்கொடுத்து விடமுடியும்? அதான் உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்கிரேன்.
 நண்பா உன் அனுமதி இல்லாமலே உன் படத்தையும் பிறந்த நாளையும்
இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிரேன். ப்ளீஸ் டோண்ட் மிஸ்டேக்மீ.......
வாழ்வில் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் எல்லாவளங்களும் பெற்று சந்தோஷமாகவும்   இருக்க வாழ்த்துகிரேன்&;வாழ்த்துகிரோம்.

இவ்வளவு சொல்லிட்டு அவரின் பெயர் சொல்ல மறந்தேனே அவர் பேரு
பீர் மொஹம்மது PEER MOHAMMED

ராம நாம மகிமை


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின  .ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

I ASK LORD KRISHNA

                                          

தொடரும் விருது.

                                                             
                                                           
                                         

கோபால் சார் மறுபடியும் விருது கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்காங்க நன்றி கோபால் சார்

DID YOU KNOW ABOUT THIS?


விருது

கோபால் சார் எனக்கும் இன்னும் 108 பேருக்கும் விருது கொடுத்து பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி கோபால் சார்
                          


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

ஒன் டச் எஸ். எம். எஸ்


atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow

ரிலாக்ஸ் ப்ளீஸ்















படித்ததில் பிடித்தது (மீள் பதிவு)


சில பாக்கியசாலிகள்,தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்

கடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்

மறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.




ராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்

சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்

ராமனும் உருகுகிரான்.

ராங்க் நம்பர்

 வெங்கட் சார் போன் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அப்போதான் என் இந்த பதிவையும் இன்னொரு தடவை போடலாமேன்னு தோனிச்சு.
ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

வேலை ரெடி

ஹோட்டலில் சாப்பாடு  ரெடின்னு போர்டு போட்டிருப்பதுபோல இருக்கா?
 நான் பதிவு எழுத ஆரம்பித்து சுமாரா ரெண்டு வருடங்கள் ஆகிரது. பலதரப்பட்டவர்களின் நட்பு கிடச்சிருக்கு 20- வயது முதல் 60 வயதுவரை நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. எல்லாருமே என்னிடம் மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் லஷ்மி அம்மான்னு அன்பாக பேசி பழகுராங்க. இது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லியா? போனமாசம் ஒரு பையன் (25 வயசு) அம்மா படிச்சுட்டு கொஞ்ச நாளா வேலை இல்லாம இருக்கேன் மும்பையில் எனக்கு ஏதானும் வேலை கிடைக்குமான்னு அவன் பயோடேட்டா எனக்கு அனுப்பினான். நானும் மும்பையில் தெரிந்தவர்களிடம் கேட்டுகிட்டு இருக்கேன். போன வாரம் துபாயிலிருந்து ஒரு ஃப்ரெண்ட் போன்பண்ணி அம்மா எங்க கம்பெனியில் வேலைக்கு ஆள் வேணும். உங்களுக்குத்தான் நெட்டில் நிறையா ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே தெரிஞ்சா சொல்ரீங்களான்னு கேட்டார். ஒருபக்கம் வேலை தேடும் இளைஞர்கள் இன்னொரு புறம் வேலைக்கு தகுந்த ஆட்கள் தேடும் பெரியவர்கள் எல்லாரும் என்னை அப்ரோச் பண்ணுவது சந்தோஷமா இருக்கு. அப்படி தனிதனியா யாரையும் விசாரிச்சுண்டு இருக்க முடியாதில்லியா அதனால அதையே ஒரு பதிவா போட்டுட்டேன்.
 துபாயில் ஆயில் கம்பெனியில் பொறுப்பான பதவியில் அவர் இருக்கார் அவங்க கண்டிஷன் சொன்னார் நானும் அதை கிழே சொல்லி இருக்கேன்.

 துபாயில் ஆயில் கம்பெனியில்  RIG SUPPLYARS  ஆக வேலை செய்ய ஆள் வேணுமாம்.
 கடுமையான உழைப்பாளியா இருக்கணும். அவங்களே ட்ரெய்னிங்கும் கொடுத்து நல்லா வேலையும் வாங்குவாங்க. ஹார்ட் ஒர்க்கரா இருக்கனும். இது ஜஸ்ட் டேபிள் ஒர்க் கிடையாது. அதே சமயம் கம்ப்யூட்டர் நாலட்ஜும் இருக்கணும் ஏதானும் ஒரு கிராஜுவேட் முடிச்சிருக்கணும். வயசு 26- க்குள் இருக்கணும் ஹிந்தி, இங்க்லீஷ், தமிழ்  நல்லா பேசத்தெரிஞ்சிருக்கணும் 50, லேந்து 55 -ஆயிரம் வரை சம்பளம் தருவாங்க. இதுதான் அவங்க கண்டிஷன்ஸ். இந்த தகுதி உள்ள பையன் யாரானும் தெரிஞ்சவங்க இருந்தா பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நான் அவங்க மெயில் ஐ. டி தரேன் நீங்க அவங்களுக்கே உங்க பயோடேட்டா அனுப்பலாம். நான் வெரும் கைகாட்டி மட்டும்தான்.

சினேகிதனே, சினேகிதனே........ 2

அடுத்த நாளே வீட்டு பெரியவர்களிடம் சொல்லிவிட்டு பெரிய பெண்ணீடம் வீட்டை கவனிச்சுக்க ச்சொல்லிவிட்டு வெங்கு இருக்கும் ஊருக்கு கிலம்பி போனார்கள்.வீட்டில் வெங்குவின் மனைவி ராதா மட்டு குழந்தைகளுடன் இருந்தா. எங்களைக்கண்டதும் வாங்கோ அவர் இப்ப தான் ஆபீஸ்வேலையா கல்கத்தா கிளம்பி போனார். என்றாள். ஓ, அப்போ என்ன பண்ரதுன்னு இருவருக்குமே யோசனை. இரவு தூங்க முடியாமல் படுக்கையில் ப்ரண்டு கொண்டிருந்தார்கள். இரவு 1- மணிக்கு காலிங்க் பெல் சத்தம் கேட்கவும் ராதா எழுந்து கதவைதிறந்தா. வெங்குதான் . வண்டில்லாம் ஓடலைன்னு ட்ரிப் கேன்சலாகி திரும்ப வீடுவந்தான். வாசு, லதாவுக்கு அப்பாடா இவன் வந்தது




மே டே நிகழ்ச்சிகள்.

ஒரு 40- வருடங்கள் முன்பு மத்தியபிரதேசத்தில் இருக்கும் கமேரியா என்னும் இடத்தில் இருந்தோம்.அந்தகால கட்டத்தில் டி. வி. , கம்ப்யூட்டர், மொபைல் போன் இந்த வசதிகள் எதுவும் வந்திருக்கவில்லை. ஆபீசும் விட்டா வீடும்தான் ஒரே பொழுது போக்கு.. தீபாவளி, பொங்கல்,யுகாதி, மேடே என்று சில பண்டிகைகள் சமயங்களில் அங்குள்ள பெரிய மைதானத்தில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஏதோ திருவிழாவுக்கு போவதுபோல எல்லாரும் போய் ஆர்வமாக கலந்து கொள்ளுவோம். அந்தவருட மே டே ஃபங்க்‌ஷனுக்கும் அப்படியே எல்லாரும் போனோம். மாலை 7- மணி அளவுக்குதான் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பார்கள். பார்வையாளர்கள் பகுதியில் அன்று சேர் எல்லாம் போடமாட்டார்கள் உழைப்பாளர்கள் தினம் என்று எல்லாரும் கீழேதான் உக்காரனும். நாங்களும் 7-மணிக்கு திடலுக்கு போனோம். எங்களைப்போலவே நிறையாபேரு வந்து திடலில் கூடி இருந்தார்கள். கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மேடையில் சங்கீத கச்சேரி நடத்த மைக், ஸ்பீகர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் எல்லாம் அடுக்கி கொண்டிருந்தார்கள்.

சினேகிதனே, சினேகிதனே.........1

கல்யானத்துக்கு தேதி கூட குறிச்சாச்சு. முகூர்த்தத்துக்கு இன்னும் ஒருமாசம் கூட இல்லே. பணத்துக்கு என்னடி பண்ரது? வாசுவின் குரலில் ஆதங்கம்.
ஏன் ஆபீஸ்ல பிராவிடண்ட் பண்ட்ல லோன் போட்டிருந்தீங்க இல்லியா? அது என்னாச்சு? லதாவின் நியாயமான கேள்வி. அது இன்னிக்குதான் கிடைச்சது ஆனா நான் எவ்வளவு அப்ளை பண்ணி யிருந்தேனோ அதில் பாதி தான்  சாங்க்‌ஷன் ஆகியிருக்கு.பாக்கி பணத்துக்கு வெளில யாருகிட்டயாவது கடன் வாங்கித்தான் ஆகணும். யாருகிட்ட போயி கேக்கரது? எப்படியும் கடன் வாங்காம கல்யாணம் நடத்தணும்னு நினைச்சோம். எங்க நடுத்தர வர்க்கத்தினரின் சாபம் இது கடன் வாங்காம எந்த ஒரு காரியமும் பண்ணமுடியாது, சரி மேற்கொண்டு யாருகிட்ட கேக்கலாம் உனக்கு ஏதானும் தோனரதா? ஏண்டி நம்ம வெங்கு கிட்ட கேட்டு பாக்கலாமா? நம்மாத்துலயே10- வருஷமா பேயிங்க் கெஸ்ட்டா இருந்திருக்கானே . அவனை நண்பன் போலவா நடத்தினோம். நம்ம குடும்பத்தில் ஒருவனாகத்தானே நினைச்சோம்.. நம்ம நிலமை எடுத்துச்சொல்லி கேட்டு பாக்கலாமா? ஆமாங்க ஏற்கனவே அவரும் நம்மகிட்ட சொல்லி இருக்காரே. பொண் கல்யாணம் என்றால் நான் ஹெல்ப் பண்ரேன்னு. இப்போ அவரும் நல்லா வசதியாதானே இருக்கார். கேட்டுபாக்கலாம். ஆனா இப்போ அவர் வேர ஊர்லன்னா இருக்கார் லெட்டர்போட்டு பதில் வரதுக்கெல்லாம் டைம் இல்லே நாம நேரிலே போயி பத்ரிகை கொடுதுட்டு விஷயம் சொல்லிட்டு வரலாம்.

கோகுலம் ட்ரஸ்ட் (2)



போனபதிவில் நிரைய பேரு அந்தக்குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த ஹெல்ப்
 பண்ணலாம்னு சொல்லி இருந்தாங்க . அவங்க வசதிக்காக. கோகுலம் ட்ரஸ்டோட
பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்ற் விபரங்கள் கொடுத்திருக்கேன். விருப்பமுள்ளவர்கள்
 ஹெல்ப் பண்ணவும் நன்றி

 மெயிலில் நிறையா பேரு இந்த விவரங்கள் கேட்டிருந்தாங்க.



THE ACCOUNT DETAILS OF THE SCHOOL.

ACCOUNT NAME :         GOKULAM TRUST
ACCOUNT NUMBER :     1129155000095944
IFSC CODE:                   KVBL0001129
BANK NAME :                KARUR VYSYA BANK , MUTHURANGAM STREET
                                      ERODE.


ஆசை


ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது 
அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்கு செல்வது 
காஞ்சி மகானின் தினசரி வழக்கம். பிச்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.  
ஒரு சமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்கு செல்லாமல் மடத்திலேயே
இருந்துவிட்டார் மகான். பிட்சைக்கு செல்லாததால், அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. 

பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.
இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.  

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்கு செல்லவில்லை . எனவே, மடத்தில் உள்ளோருக்கு
பயம் தொற்றிக் கொண்டது.  மடத்தில் உள்ளோர் எதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு

பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.
அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் நின்றார்கள்.  

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!" 
எனப் பணிந்து வேண்டினர்.  
மகா பெரியவர் சிரித்துகொண்டே,  "நீங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் 
கோபமும் இல்லை. என்னை திருத்திக்கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்சம் நாட்களுக்கு முன் பிச்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். 

அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.  பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிச்சையில்
கீரை இருக்குமா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். 
ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது" என்றார்.  
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் 
பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Hara Hara Sankara Jai Jai Sankara...

கோகுலம் ட்ரஸ்ட்

 இப்பவும் ஈரோடு பதிவுதான். ஒரு பள்ளியின் பிரின்சிபால் அம்மா என்னை வீட்ல வந்து பாத்தாங்க. அவங்க என்கிட்ட அம்மா நாங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தகளுக்கான ஒரு பள்ளி நடத்துரோம். நீங்க  நிறையா ப்ளாக் எல்லாம் எழுதுரீங்கன்னு உங்க வீட்ல சொன்னாங்க. எங்க பள்ளி பத்தியும் கொஞ்சம் எழுதமுடியுமா என்றார்கள். சொல்லுங்க என்ரேன். ஆண்டவன் படைப்பில் இது போல மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் படைப்பு ரொம்ப பரிதாபம். ஏன் என் ரெண்டு பசங்களுமே அப்படியான பசங்கதான்.  நாங்க ஓரளவு வசதியா இருப்பதால இது போல குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தனும்னு நினைச்சு ஈரோட்ல நடத்துரோம் அம்மா. கவர்மெண்ட்ல பதிவும் செய்திருக்கோம். ஆனா எந்த சாரிட்டி மூலமாகவோ எந்த டொனேஷன் மூலமகவோ இந்தபள்ளியை நடத்தலேம்மா. முழுவதும் எங்க சொந்த செலவுலதாமா பன்ரோம். இப்பத்தைக்கு 20- குழந்தைகள் எங்க பள்ளியில் இருக்காங்க. 4- ஆசிரியர்களும் இருக்காங்க. அவங்களும் சேவை மனப்பான்மையுடன் தான் இந்தப்பணியை பொறுப்பாகவும் பொறுமையாகவும் செய்து வராங்க. ஆனாலும் கூட அவங்களுக்கும் குடும்பம் குழந்தைன்னு இருக்கே. அவங்களையும் கவனிக்கணுமே. அதுக்கு வருமானம் வேனுமில்லியா. எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு சம்பளம் கொடுக்கிரோம்மா.

ஈரோடு 3

இந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்படில்லாம் நான் பண்ணியாகணும். இல்லைனா கோவிச்சுகிட்டு போயிடுவான். அவஙக்ல்லாம் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்துடுவாங்க. நானோ லேட்டா தூங்கி லேட்டா எழுந்துப்பேன். காலேல்யே ஆரம்பிச்சுடுவான். பாட்டி என்ன நீ இவ்வள்வு நேரம் தூங்குரே. நான் சீக்கிரம் எழுந்திருச்சு உனக்காக வெயிட்பண்ணிட்டு இர்ப்பேன்னு உனக்கு தெரியாதா? சீக்கிரமா பல்தேய் நீ காபி குடிச்சுட்டு அதுல கொஞ்சம் எனக்கும் தா. என்பான் அப்பலேந்து அவன் ஆட்டி வக்கிரபடில்லாம் ஆடித்தான் ஆகணும். வேரவழி. அவங்கல்லாம் காலை 9-மணிக்கே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. பாட்டி எனக்கு

DIVINE ACU THERAPY

போன மாசம் ஈரோடு போனதில் சில சு  சுவாரசியமான  அனுபவங்கள். அதில் ஒன்று இந்த ஹெல்த் கேர் அனுபவம்.இங்கு வந்தபிறகு ஒரு மாற்று மருத்துவ முறையைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மருந்தில்லா மருத்துவம் என்று அதற்குப்பெயர். இந்தமருத்துவ மையத்தை நடத்துபவர் பெயர்  E. R. திரு ஞானம் அவர்கள்..கடந்த 23 ஆண்டுகளாக அவர் இந்த சிகிச்சையை செய்து வருகிரார். அவர்  ACU THERAPY  மட்டுமல்லாது  DIVINE HEALING, MAGNETIC THERAPY,   FLOWER MEDICINE,  REIKI HEALING  போன்ற பலவிதமான மாற்று மருத்துவ முறையில் பலவித நோய்களுக்கு மருத்துவம் செய்து வருகிரார்.கடந்த 6- வருடங்களாக பலவித நோய்களை குணப்படுத்தி இருக்கிரார். 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தபயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்தும் வருகிரார். அவரிடம்  கற்றுக்கொண்ட சிலர் தனியாக செண்டர் வைத்து மருத்துவம் செய்து வருகிரார்கள்.

ஈரோடு சந்திப்பு

 ஈரோடு போய் வந்து ஒருவாரம் ஆகுது. அங்கு நடந்த சம்பவங்களை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா/ முதல்ல பதிவர் சந்திப்பு.
 பதிவுலகில் நம்ம எல்லாருக்குமே  நன்கு அறிமுகமாகி இருப்பவர்  அட்ராசக்கை எனும் தலைப்பில் பதிவெழுதிவரும் சி. பி, செந்தில் குமார் அவர்கள்.1000 பதிவுகளுக்கும் மேல் எழுதி சாதனை படைத்திருப்பவர்,அந்த பந்தா எதுமே இல்லாமல் மிகவும் இனிமையாக பேசிப்பழகுகிரார்.ஈரோடு போனதும் 10- நாட்கள் கழித்து அவருக்குதான் முதலில் போன் பண்ணினேன். பதிவெழுதுபவர்களில் பெரும்பாலோனர் எழுத்துமூலம் மட்டுமே அறிமுகமாகி இருப்போம். அப்படி முகம்தெரியாம பழகினவங்களை நேரில்பார்க்கும் போது மனசுபூராவும் ஒரு சந்தோஷம் வந்து ஒட்டிக்குது பாருங்க, அதை அனுபவிச்சு பாத்தாதான் புரிஞ்சுக்கமுடியும்.


புதிய இந்தியா


இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்றி

புதிய இந்தியா

"*levis jeans" **ஸும்,"van heusen"ஸும்
*வந்ததால் - எங்களின்*
*பருத்தி ...காதி துணிகள்**
பழசாய்ப் போயின**!

"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!

"pizza" வும் "burger" ரும்*
*வந்ததால் - எங்களின்*
*இட்லி,சப்பாத்திக்களை*
*சுவை இழக்க வைத்தன**!

"axe perfume" உம் "olay" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மஞ்சளும்,மருதாணிக்களும்*
*வாசம் இழந்துப் போயின**!

"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!

"cricket"டும்,"golf" பும்*
*வந்ததால் - எங்களின்*
*கபடியும்,மல்யுத்தமும்*
*களையிழந்துப் போயின**!

"wine" னும்,"vodka" வும்*
*வந்ததால் - எங்களின்*
*கூழையும்,கள்ளையும்*
*குழித்தோண்டிப் புதைத்தன**!

"standard charted,american express bank" கும்*
*வந்ததால் - எங்களின்*
*கூட்டுறவு வங்கிகள்*
*திவாலாகிப்போயின**!

"dollar ,euro" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மூளைகள் வெளிநாடுகளில்*
*அடமானத்திற்க்கு விற்கப்பட்டன**!

இதோ**....
"walmart" டும்,"tesco" வும்*
*வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்*
*நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்*
*உழைக்கும் விவசாயிகளும் கூட இனி**...
*அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்*
*மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்**.

*இருப்பதை விட்டுவிட்டு*
*பறப்பதற்கு ஆசைப்படும்*
*அரசியல் அதிகாரிகளுக்கு*
*மீனைவிட தூண்டில் பெரிதென்று*
*புரிவதெப்போது?*

மனசே ரிலாக்ஸ்

இப்ப ஒருமாசமா  ஈரோடில் தாமசம். பெரியமகன் வீட்டில்
 வருஷத்தில் ஒருமாதம் ஏதாவது ஒரு மகன் வீட்டிலோ
 மகள் வீட்டிலோ போய் தங்கி அவர்களை சந்தோஷப்படுத்தி
 நானும் சந்தோஷப்படுவேன்.பாக்கி 11 மாசமும் அம்பர்னாத்.
 மும்பை லைஃப் ஸ்டைலில் இருந்து டோட்டலி டிபரண்ட்டா
 இருக்கு.காலை நான் கொஞ்சம் லேட்டாதான் எழ்ந்துப்பேன்
 இரவு லேட்டாபடுப்பேன். இவங்கல்லாம் நான் எழுந்து காபி
 குடிக்கும்போதே ஃபுல் லஞ்ச் சாப்பிடுவாங்க. அதுவே எனக்கு
 வேடிக்கையா இருக்கும். இவங்க 9 மணிக்கு வெளில கிளம்பி
போனா மாலை 5- மணிக்குத்தான் திரும்ப  வருவாங்க. இரவும்
9-மணிக்கு தூங்கிடுவாங்க.

மின்சாரம் அது மின்சாரம்


பவர்கட் ஜிந்தாபாத்




இங்கு நாங்க வசிக்கும் பகுதிகளில் சம்மரில் காலை 3 மணி நேரம்

சாயந்தரம் 3 மணி நேரம் கரண்ட் கட் ஆகும். காலை, மாலை இரு

நேரமும் 6 டு 9 கரண்ட் கிடையாது.இப்ப விண்டரில் காலை, மாலை

ஒரு, ஒருமணி நேரம் கரண்ட்கட். எல்லா இடங்களிலும் உள்ளதுதான்.

நாங்க இருப்பது ஸிட்டியை விட்டு 60 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி

இருக்கும் புற நகர்ப்பகுதியாகும். நல்ல கிராமப்புரப்பகுதி தான். எல்லா

விஷயங்களுக்கும் 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்டேஷன் வரை

போகனும். காய்கறி, பால், ப்ரொவிஷன்,டாக்டர், மருந்துக்கடை என்று

எதுவுமே பக்கத்தில் கிடையாது.

                            வார்த்தை சித்திரங்கள் ஜி ஜி அவங்க இந்த விருது எனக்கு கொடுத்திருக்காங்க. நன்றி ஜி ஜி. நான் ஏற்கனவே இந்தவிருதை பகிர்ந்து கொண்டேன். மறுபடியும் ஐவரைச்சொல்லனுமா?

கோவா.

ஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு.
கொங்கன் ரயில்வே வழியில் நிறைய புது ஊர்கள் பேரக்குழந்தைகளுடன் அரட்டை என்று ஜாலியாக இருந்தது. பெரியமகன் ஃபேமிலியுடன் ஈரோடில் இருந்து கோவா வந்தார்கள். ஈரோடிலிருந்து டேரக்டா கோவாக்கு ரயில் இல்லே. ஷோரனுர் போயி அங்கேந்து கோவா வந்தார்கள். ரயிலில் 20-மணினேரம் பயணம். போகவர் 3- நாட்கள் ஆனது, கோவாவில் சின்னமகன்
                                           

                        
 புதுசா வீடு கட்டி இருந்தான். அதுபாக்கவும் கோவா சுத்திபாக்கவும் எல்லாரும் போனோம். வீடு வில்லாடைப்பில் மிக பிரம்மண்டமான பங்களாவாக இருந்தது. மாடியும் கீழுமா அழகா இருந்தது. இப்பதான் கட்டி முடித்திருப்பதால கரண்ட்கனெக்‌ஷன், வாட்டர் கனெக்‌ஷன் இன்னும் கொடுக்கல்லே. அதனால ஹோட்டலில் தான் தங்கினோம்.அங்க கரண்ட் எல்லாம் சோலார்பவரில்தான் ஒர்க் பன்ரது. நல்ல சிஸ்டம் இல்லியா?

கோவா டூரிஸ்ட் ப்ளேஸ் இல்லியா டூரிஸ்ட்களின் நடமாட்டம்தான் திரும்பினபக்கமெல்லாம். மோஸ்ட்லி ஃபாரினர்ஸ்தான். குழந்தைகள் எல்லாருடனும் சேர்ந்து இருந்ததால டைம் போனதே தெரியல்லே. தினசரி கடல் குளியல், ஹோட்டல் சாப்பாடு ஊர் சுற்றுவது என்று இருந்தோம்.
                               
திரும்பின பக்கமெல்லாம் பெரிசு பெரிசா சர்ச் இருக்கு , அதுபோல பீச்சும் நிறையா இருக்கு. ஒவ்வொரு பீச் ஒவ்வொரு பெயரில். பீச்சுன்னா அங்கயும் ஃபாரினர்ஸ் ஸன்பாத் எடுக்கும் காட்சிகள்தான் நிறையா கண்களில் பட்டுண்டே இருந்தது. ஊர் என்னமோ சின்னதா தன் இருக்கு. முதல் நாள் நாங்க

                              
 பீச் போகும் போது எதிரில் வந்த பைக் பாத்து திடுக்கிட்டுப்போனோம். எலும்புக்கூடு மாதிரி பைக்கை வடிவமைத்து இருந்தா. தினசரி பார்த்து பார்த்து

                                    

                              அதுவும் பழகிப்போச்சு.குழந்தைகள் கடலில் குளிக்க இறங்கினா கரை ஏறவே மாட்டேங்கரா. அவ்வளவு ஜாலியா எஞ்சாய் பன்ரா.

பெரியவங்களும் அப்படியேதான் எஞ்சாய் பண்ணத்தானே வெளி ஊர்லாம் போரோம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம். நான் க்ரையில் உக்காந்துண்டு எல்லாரையும், எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டே

                                    

                                  
 இருந்தேன். நடு மறுமகள் நிலாவை கைக்குள் பிடித்து அந்த நிலாவைதான் நான் கையில பிடிச்சேன்னு போஸ்கொடுக்கரா. சின்னமகன் மஹேந்த்ராக்ளப் ஹவுசில் மெம்பரா இருக்கான். வருஷத்துக்கு ஒரு தொகை கட்டினா நாம எப்பபோனாலும் அங்க தங்க சவுரியம் பண்ணித்தருவா. அங்கதான் தங்கினா.  எல்லா பீச் பக்கமும் மீன் பிடிக்கும் வலை காயப்போட்டிருக்கா. எனக்கு ஊர் பூராவும் மீன் வாடை அடிக்கராப்லவே இருந்தது. வெஜ்

                 
ஹோட்டலாபாத்துதான் சாப்பிட போனோம் அங்கயும்கூட மீன் வாடைதான்.

               









ப்யூர் வெஜிடேரியனாஇர்க்கரவங்களுக்கு இதெல்லாம் பெரிய தொல்லைதான். ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரியல்லே.  தோசை, வடை எல்லாம் நிறையா சாம்பார் கூட தராங்க. டேஸ்ட்டும் ஓக்கே தான். தெரிஞ்சவங்க வீட்டுக்கு ஒரு


                                                                       
                                          நாள் போனோம் அவ வீட்டில் ஒரு நாய்க்குட்டி இருந்தது எங்களையெல்லாம் கூட்டமாபாத்தது பாவம் அது பயந்தேபோச்சு. குழந்தைகளுடன் நல்லா விளையாடினது.

பீச்பக்கம் சுத்தும்போது அங்குவரும் டூரிஸ்ட்களுக்கு கைட் எல்லாரும் அந்தந்த இடங்கள் பற்றி விவரம் சொல்லிண்டு இருந்தா, இதுதான் சிங்கம் ஹிந்திப்படம் ஷூட்டிங்க் எடுத்த இடம், இதுதான் ஏக் துஜே கே லியே ஹிந்திப்படம்

                                       
                               
 ஷூட்டிங்க் நடந்த இடம்னு சொல்லிண்டு இருந்தா. படம் ஷூட்டிங்க் எடுத்த இடம்னு சொன்னால்தான் எல்லாரும் ஆர்வமா பார்ப்பார்களோஎன்னமோ?கோவாகிளைமேட் கொஞ்சம் சூடாகத்தான் இருக்கு. மும்பையில் அதிகாலை, இரவுகளில் நல்லகுளிர் இருக்கு.. ஒருவாரம் ஆனதும் அவரவர்கள் கிளம்பி அவரவர் இடங்களுக்கு திரும்பியாச்சு. நான் நேர உங்களையெல்லாம் சந்திக்க வந்துட்டேன். நாளை முதல் ஆப்ரிக்க பயணம்தொடருகிரேன். எல்லாரும் அங்க வந்துடுங்க.
Related Posts Plugin for WordPress, Blogger...