Pages

Back to Top

எதிர்காலம்?



நாங்க ஜபல்பூரில் இருக்கும்போது அக்டோபரில் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்து
சந்த்ராபூர் போகும்படி ஆனது. குழந்தைகள் எல்லாரோட ஸ்கூல் திறந்து 5
 மாதம்ஆனநிலையில்ட்ரான்ஸ்பர்.பெரியமகன்11வதுபடித்துக்கொண்டிருந்தன்.
 வீட்டுக்காரர் ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலை. எங்கமாத்தினாலும் பேக்டரி
ஸ்கூலில் இடம் கொடுத்து விடுவார்கள். அதனால எல்லாரையும் கூட்டிண்டு
 கிளம்பினோம்.போன இடத்திலும் அதிக கஷ்டப்படாமல் ச்கூலிலும் சேர்த்து
விட்டோம். ஜபல்பூர் மத்யபிரதேஷ். அங்க ப்யூர் ஹிந்தி மெயி்ன் சப்ஜெட்.
சந்த்ராபூர் மஹாராஷ்ட்ரா. மராட்டி மெய்ன் சப்ஜெட்.. நல்லவேளை குழந்தை
கள் எல்லாருமே நல்லா படிக்கரவங்கதான். 5மாசத்துல ம்ராட்டியும் பிகப்
பண்ணிண்டுவாங்க.






முழுபரீட்சையில் எல்லாருமே 80% க்கு மேலே எடுத்து பாஸ் பண்ணிட்டாங்க.
11-வது படிக்கும் மகன் 88% வாங்கி அந்த ஸ்கூலிலேயேமுதலாவதாகவந்தான்.
அதுவரை எல்லாமே ஸ்மூத்தாகப்போனது. அடுத்த க்ளாஸ் அட்மிஷனுக்காக
இவர் ஸ்கூல் போனப்போ.எல்லாரோடபோனவகுப்பின் மார்க் லிஸ்ட் கேட்டா
இவரும் எல்லாம் சரியாக கொடுத்தார். பாக்கி நாலு பேருக்கும் ஈசியா அடுத்த
க்ளாசுக்கு அட்மிஷன் கொடுத்துட்டா.பெரியவன் டர்ன் வந்தப்போ அவன்10-
வது மார்க் லிஸ்ட், 11, மார்க் லிஸ்ட் எல்லாம் பாத்துட்டு, வெரி,க்ளவர் பாய்
என்றுசொல்லிட்டு, சார் 10-வது ஸ்கூல் மார்க் லிஸ்ட்னா இருக்கு. போர்ட்
எக்சாம் கொடுக்கலையா? என்றார்.




இல்லை இவ்வளவு நாள் ஜபல்பூர்ல படிச்சான். இப்ப இங்கவந்து 5-மாசம்தான்
ஆகுது என்றார். ஓ.ஜபல்பூர்னா அது எம்,பி, ஸ்டேட் இல்லியோ?அங்கெல்லாம்
11-வதுன்னா S.S,C போர்ட் எக்சாம். ஏன்பாதில இங்க கூட்டி வந்தீங்க? இங்க
அதாவது மஹாராஷ்ட்ராவில் 10+2-ஸிஸ்டம். 10-வது போர்ட் எக்சாம் எழுதி
இருந்தாதான் 12-வது போர்ட் எழ்தமுடியும்.இல்லைனா 11-வதாவது போர்ட்
எழுதி இருக்கணும். இப்ப 12-வதுக்கு அட்மிஷன் கொடுக்கமுடியாது.ஒன்னு
இங்க10படிச்சுபோர்ட்எழுதசொல்லுங்க.வேரவழியேஇல்லைன்னுசொல்லிட்டர். எங்களுக்கு ரொம்ப டெஷன் ஆச்சு.எப்படியும் 10-வது போர்ட் எழுதித்தான்
ஆகணும் என்று ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா நாங்க என்ன செய்ய. எங்களுக்கும்
எம்,பி, யில் 11 போர்ட்,மஹாராட்ராவில் 10+2 ஸிஸ்டம் என்பதெல்லாம் முத
லிலேயே தெரிந்திருக்கலை.




பையனிடம் சொன்னோம். அவன் ரொம்பவே அப்செட் ஆனான். என்னப்பா
இப்படி சொல்லராங்க? 11-ல பெயிலானாகூட திரும்ப 11 தான் படிக்க சொல்வாங்க. ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வந்துட்டு ஒருக்ளாஸ் கம்மியா படிக்கனுமா? என்கூட படிச்சவங்கல்லாம் 12 போவாங்க நான் 10-வதா? எப்படிப்பான்னு
ஓன்னு ஒரேஅழுகை. அவனை சமாதானப்படுத்தவே முடியலை.எனக்கு
ரொம்ப ஷேமா இருக்குப்பான்னு சொல்லிண்டே இருந்தான். வேர என்னதான்
 பண்ணமுடியும் மாறி, மாறி அவனை சமாதானப்படுத்தி 10-வது அட்மிஷன் வாங்கி நோம். ஃப்யூச்ச்ர்க்கு அதுதான் சரியா இர்க்கும்.எப்படியோ ஒழுங்கா
ஸ்கூல் போய் வந்தான்.ஆனா அவன் சந்தோஷமே கானாம ப்போயிடுத்து.




மராட்டிவேறு ரொம்ப தொந்தரவு கொடுத்தது. அப்படியும் 10-வது ரிசல்ட் வந்த
போது95% வாங்கினான். எங்களுக்கும் நல்ல திருப்தியே.ஸ்கூலிலும் நல்ல
பாராட்டுக்கள்.இப்போ திரும்பவும்11, அப்பரம் 12, படிக்கணும். எவ்வளவு வருஷம் வேஸ்ட். மனசளவுல எவ்வளவு அப்செட்.15, 16, வயசில் இருக்கும்
ஒரு டீன் ஏஜ் பையனுக்கு மனசுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்? நல்ல
 வளர்ப்பு, நல்ல பையனாக இருந்ததால் நல்ல மார்க் எடுத்துட்டான். அப்பரம்
அடுத்தக்ளாசுக்கு அட்மிஷன் வாங்க வேண்டாம்னுட்டான். எங்களுக்கு
அதிர்ச்சி. என்னடா இப்படி சொல்ராய்.என்ரால் இல்லைப்பா எனக்கு படிப்பு
மேலயே வறுப்பா இருக்கு. உங்க ஆபீசில் வேலை வாங்கி தாங்க, நான் இனி
 வேலைக்குப்போரே.இனிமேலபடிக்கமாட்டேன்னுதீர்மானமாசொல்லிட்டான்.




என்னடா இப்படி சொல்ராய் படிப்புதான் உனெதிர்காலதுக்கு நல்லது.படிக்க
மாட்டேன்னுல்லாம் சொல்லாதேன்னு எவ்வள்வோ நல்லதனமா சொல்லிப்
பாத்தும் அவன் கேக்கவே ரெடி இல்லை. அவன் இவ்வளவு பிடிவாதமாஇருக்
 கான்னா, அவனுக்கு கிடைத்த அனுபவம் அவனை அப்படிநினைக்கவச்சுடுத்து.
சரின்னு ஆபீசில் அப்ரெண்டீசுக்காக ஏற்பாடு பண்ணினார்.அதுக்கும் ரிட்டர்ன்
டெஸ்ட், இண்டர்வ்யு எல்லாம் வைத்து, திறமை இருந்தால் தான் சேர்த்துக்
 கொள்வார்கள். டெஸ்ட்ல எல்லாமே டாப் மோஸ்டா பாஸ் பண்ணிட்டான்.
மொத்தம் அவன்கூட 8 பையன்கள் இண்டெர்வ்யு செய்து அப்ரெண்டீசாக செலக்ட் ஆனார்கள். மத்தபசங்களுக்கு 3- வருஷம் கோர்ஸ். இவன் நல்லா
 பெர்ஃபார்ம் பண்ணினதால மில்ரைட் செக்‌ஷனில் 4 வருஷ கோர்ஸ் கொடுத்
தார்கள்.




வேலைக்கும் விருப்பமாகவே போய்வந்தான் ,ஸ்டைஃப்ண்ட்250 கொடுத்தா.
ஒரே ஆபீசில் அப்பா ஆபீசர், பையன ஒர்க்கர். காக்கி ட்ரெஸ்ஸில் மகன்
ஏழே கால் சங்கு ஊதினதும் சைக்கிளில் கிளம்பிடுவன். கயில் லஞ்ச் 7, 8,
சப்பாத்தி,பாஜி கட்டிக்கொடுப்பேன். இவர் 8 மணிக்கு ஸ்கூட்டரில் போவார்.
 12-மணிக்கு கேரியர்வாலா வந்து இவருக்கு லஞ்ச் கொண்டு போவான்.
 இப்படி அமைதியா 3 வருஷம் போச்சூ. 3 வருஷம் முடித்த அப்ரெண்டிஸ்
பையன்களுக்கு சூப்பர்வைசராக ஆபிசிலேயே வேலைக்கு எடுத்துக் கொண்ட
னர். ஆபீசிலேயே ஒரு ரூல் இருந்தது. அப்ரெண்டீஸ் களை அங்கியே வேலைக்க்கு எடுத்துக்கணும் என்று. இவனோடு 4 வருஷமும் முடிந்தது.
அந்தவருஷம் பாத்து அந்தரூல் கேன்சல் ஆயிடுத்து.




இவனை ஆபீசில் வேலைக்கு எடுத்துக்கலை. மில்ரைட் கொஞ்சம் உசத்தியான
 கோர்ஸ். சின்சியரா வேலை பார்த்தும் ஆபீசில வேலை இல்லைன்னுட்டாங்க.
 என்னன்னு சொல்ல.இவனுக்கு ஏன் இப்படிஎல்லாத்லயும்தடங்கல்ஆயிண்டே
இருக்குன்னு எஙகளுக்கெல்லாம் ரொம்பவேமனசுக்கு பாரமா இருந்தது.
 அவன் மனசு என்னபாடு பட்டிருக்கும்? ஒரு வருஷம் வீட்ல சும்மாவே இருந்தான். எனக்கு ஹெல்ப்பா சமையல் முதல் வீட்டு வேலை கள் எல்லாமும் செய்து தருவான். அந்த காலகட்டத்தில் பேங்க் க்ளர்க் வேலைக்கு
10- வதே போதுமான க்வாலிபிகேஷனாக இருந்தது.கண்ணீல்படும் வேலைக்கு
எல்லாம் அப்ளை பண்ணிண்டு இருந்தான்.ஒருவருஷத்திற்குப்பிறகு ஸ்டேட்
 பேங்கிலிருந்துஇண்டெர்வ்யு கார்ட் வந்தது. நாக்பூர் போயி இண்டர்வ்யூ
அட்டென் பண்ணிட்டு வந்தான்.




அதில் செலக்ட் ஆகி ஹெல்த் செக் அப்புக்கு ஒரு நாள் கூப்பிட்டா. எல்லாம்
 ஆச்சு இனி வேலைக்கு சேரும் ஆர்டர்தான் வரணும்னு குஷியா இருந்தான்.
ஹெல்த் செக்கப் ஆனதும் ஒரு பேப்பரில் அவனையே ஃபில் அப் பண்ணி
தரசொல்லி இருக்கா. என்குழந்தைகள் யாருமே எதுக்காகவும் பொய்யே
பேசமாட்டா. ஹெல்த் பேப்பரில் எனக்கு ஒருகாதுல கொஞ்சம் டிஃப்க்ட்
இருக்குன்னு சின்சிய்ரா எழுதிக்கொடுத்திருக்கான்.உன்மையில் ஒருகாது
கொஞ்சம் கம்மியாதான் கேக்கும்.அவனுக்கு. அந்தபேப்பரைப்பார்த்த பெரிய
ஆபீசர் பேங்க் உத்யோகத்துக்கு உடம்புல எல்லா பார்ட்டும் பர்ஃபெக்டா இருக்
கணும். அதுவும் மெயினாகாதும் கண்ணும்குறையில்லாம இருக்கணும்.
 எல்லா டெஸ்டிலும் பாசாயிட்டு ஹெல்த் செக் அப்பில் ரிஜெக்ட் பண்ண
 வேண்டியிருக்கு சாரின்னு சொல்லிட்டா.




வீட்டுக்குவந்து ஒரே அழுகை எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னு
 விசும்பி, விசும்பி அழரான்.எப்படி அவனை சமாதானப்படுத்துவதுன்னே தெரியலை.

புண்ணிய ஷேத்திரம்???!!!!(காசி)

இதுவும் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம்தான். நாங்க அப்போ சந்த்ரபூரில் இருந்தோம். என் அப்பா, அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்தாங்க.
கடசி தங்கையின் கல்யாணம் கூடி வரலியென்னு ரொம்ப கவலையில் இருந்தாங்க.ஊர்லயே ஒரு ஜோசியரிடம் கேட்டாதுக்கு, அவர் காசி யாத்திரை
போய் வாங்க எல்லாம் நல்ல படி ஆகும்னு சொல்லியிருக்கார். அம்மா என்னிடம்
 சொன்னா. நான் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.அவருக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது. என் தங்கை தம்பிகளை அவர் கூடப்பிறந்தவங்களாகவே நினைக்கும் பெரிய மனசு அவருக்கு. அதுக்கென்ன
 போனாப்போச்சுன்னு சொன்னார்.

ஹெல்த் கேர்(3)



ஆஸ்பிடலில் இருந்து எப்படா வீட்டுக்கு போலாம்னு ஆச்சு.ஸ்பெஷல் வார்ட் 

வந்ததும் டாக்டர் வேர பெரிய ஆஸ்பிடல் போயி ஆஞ்சியோ டெஸ்ட் எடுக்க

சொன்னார். நான் கேட்டேன் அதனால என்னாகும் என்று.இல்லைமா 

எங்கல்லாம் ப்ளட் க்ளாட் ஆகிஇருக்குன்னுதெரியவரும்அதுக்குத்ததகுந்தாப்ல

ஆஞ்சியோ ப்ளாஸ்டோ பைபாஸொ பண்ணிடலாமென்றார். அது எதுக்குன்னு

திரும்பவும் கேட்டேன். என்னம்மா இப்படி கேக்குரீங்க. ரெண்டு அட்டாக் ஒரே 

சம்யம் ஆகி அதிர்ஷ்ட வசமா நல்லபடியா பிழைச்சு வந்திருக்கீங்க.ஹார்ட் 

ரொம்ப வீக்கா இருக்கு. இந்தகண்டிஷன்ல இன்னும் ஒரு 5 வருஷம்தான் நீங்க

உசிரோட இருக்க முடியும். பைபாஸ் பண்ணிகிட்டா கூட் ஒரு 10 வருஷம் 

இருப்பீங்க என்றார். அப்போ இவ்வளவு மருந்து மாத்திரை எல்லாம் தேவை

இல்லியான்னேன். டாக்டர் சிரிச்சுகிட்டே இன்னமும் கூடவே மருந்து 

மாத்திரைஎடுத்துக்க வேண்டி வரும் என்றார்.


ஹெல்த் கேர்.(2)



வாச்மேன் இண்டெர்காமில் தகவல் சொன்னான். மருமகள் கீழே வந்து என்னைலிஃப்டில் வீட்டுக்கு கூட்டிப்போனா.மகன் ஆபீஸ்வேலை விஷயமாக அன்றுகாலைதான் டில்லி போன்னானாம். மருமகளும் குழந்தைகளும் வேலைக்காரிகளுமே வீட்டில் இருந்தார்கள்.சமையல் முதல் எல்லா வேலைகளுக்குமே வேலைக்காரிகள் இருந்தார்கள். மருமகள் உடனே ஃபேமிலிடாக்டருக்கு போன் பண்ணி விபரம் சொன்னா. அவரும் உடனே, இவங்களைஉடனே லோக்(பெரிய ஆஸ்பிடல்) கூட்டிப்பொங்கன்னு சொன்னார்.அங்க எல்லாவற்றுக்குமே ஸ்பெஷலிஸ்ட் இருப்பாங்க.

ஹெல்த் கேர்.

ரெண்டு வருடம் முன் ஒரு ஜூலை மாதம் வழக்கம்போல மார்னிங்க் வாக்,
யோகா மெடிடேஷன்,பிராணாயாமம் எல்லாம் செய்து முடிந்ததும் கொஞ்சம்
ஒரு 5 நிமிடத்துக்கு ரிலாக்ஸ் பண்ணிண்டேன்.10 வருஷமாகவே இதெல்லாம்
 ரெகுலராக செய்து வரேன். கோவம் என்பதே கிடையாது. கவலையோ, டென்ஷனோஎதுக்குமே படுவதில்லை. ரொம்பவே சாந்தமுடன் அமைதியாக
இருப்பேன். அன்று காலை உக்காந்திருக்கும்போதே திடீர்னு கீழ்த்தாடை பக்கம்
 லேசாக ஒரு வலி தொடங்கியது.ஏன் இப்படி வலிக்குதுன்னு யோசிக்கும்போதே
தலை முதல் கால்வரை வேத்து கொட்டித்து. முகம் அலம்பி டவல் எடுக்க பெட்
ரூம் போனேன்,அவ்வளவுதான் தெரியும். நினைவே இல்லாம ஒரு மணி நேரம்
 கீழே விழுந்திருக்கேன்.

சடன்னா எழுந்து பாத்தா ஒருமணி நேரமா நினைவே இல்லாம விழுந்திருப்பது
தெரிய வந்தது.டவல் கொண்டு முகம் துடைத்தபிறகு கூட வேர்வை நிக்கவே
 இல்லை. திடீர்னு கழுத்தை சுத்தி பின்கழுத்துபக்கம்னு வலிசிவியரா ஆச்சு.
 நிக்கக்கூட முடியாம உடம்பு நடுக்கம் வேர. நான் தனியாகதான் இருக்கேன்.
 நான் இருக்கும் இடத்தில் டாக்டர் வசதியெல்லாம் போறாது. கொஞ்ச நேரம்
 மனதை அமைதி படுத்திண்டு, நமக்கு ஒன்னுமில்லை, ஒன்னுமில்லைன்னு
ஆட்டோசஜ்ஜஷன் மாதிரி சொல்லிண்டே உக்காந்தேன். அப்படியும் எந்த முன்
நேற்றமும் இல்லை. சரி இது சரியா தோணலியேன்னு எனக்குத்தெரிந்த ஒரு
ஆட்டோக்காரப்பையனை போன் பண்ணி வரச்சொன்னேன். உடனே வந்தான்.
 என்னாச்சும்மா? என்றான். இப்பவே என்பையன் வீடு கூட்டீபோயி விடு என்றேன்.

 நான் இருக்கும் இடத்திலேந்த பையன் இருக்கும் இடம் 40 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோக்காரப்பையன் ரொம்ப நல்ல மாதிரி, என்கண்டிஷன் பார்த்து
அவனே பயந்து போனான். நான் இருப்பது மூணாவது மாடி.என்னை மெதுவாக
 கையைப்பிடித்துக்கொண்டு கீழே கூட்டிண்டு போய் ஆட்டோவில் உக்கார வைத்தான்.எ ன்னால உக்காரவே முடியலை. படுத்துட்டேன். கூடியமான வரை
மேடு, பள்ளம் பார்த்துகவனமாகவே ஓட்டிண்டு போனான்.ஒண்ணரை மணி
 நேரம் ஆச்சு. அவங்க இருப்பது சிட்டி சைட். எல்லா வீடுகளிலும் லிஃப்ட் உண்டு.
 எனக்கு ஆட்டோலேந்து இற்ங்கவே முடியலை.


பெட் அனிமல்(4)எண்ட்.



பெட் அனிமல்(4)எண்ட்






ஒரு அவசர வேலை விஷயமா நாங்க இருவரும் கிராமத்துக்குப்போக வேண்டி வந்தது.பெரியபொண்ணு படிப்பு முடிந்து வீட்லதான் இருந்தா. அவளிடம் சமைத்துப்போடச்சொல்லிகுழந்தைகள், வீட்டையும் பாத்துக்கச்சொல்லிட்டு நாங்க ஒருவாரத்துக்கு ஊருக்குப்போயிட்டுவேலைகள் முடிந்து ஒரு நாள் சாயந்தரம் வீடுவந்தோம். அன்றும் ஒரு ஜனவரி26-ம் தேதி.
Related Posts Plugin for WordPress, Blogger...