நான் இப்போ மகன்வீட்டுக்கு வந்திருக்கேன். நான் இருக்கும் அம்பர் நாத்லேந்து மகன் இருக்கும் தாணா என்னுமிடம் 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு.லோக்கல்வண்டி பிடித்து ஒருமணி நேரம் ட்ராவல் பண்ணீதான் அங்க போகனும். அவங்க வீட்ல பிள்ளையார் 5 நாள் வச்சு பூஜை பஜனை அன்னதானம் எல்லாம் சிறப்பாகச்செய்வார்கள். என்னையும் வாரச்சொல்லி இருந்தா. போயிருந்தேன். சதுர்த்திக்கு முதல் நாள் பிள்ளையார் அழைத்து வருவதுதொடங்கி சிறப்பான வழிபாடுகள் எல்லாம் செய்தார்கள். தினசரி 3 வேளை பூஜை ஆரத்தி பிரசாதங்கள் என்று நடந்தது. பிள்ளையார பார்க்க நிறையபேர் வந்தார்கள். எல்லாருக்கும் மஞ்சள் குங்குமம் பிரசாதம் கிஃப்ட் ஐட்டம் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள்.
| Tweet | |||||