Pages

Back to Top
Showing posts with label ஒரு அனுபவம்.. Show all posts
Showing posts with label ஒரு அனுபவம்.. Show all posts

மே டே நிகழ்ச்சிகள்.

ஒரு 40- வருடங்கள் முன்பு மத்தியபிரதேசத்தில் இருக்கும் கமேரியா என்னும் இடத்தில் இருந்தோம்.அந்தகால கட்டத்தில் டி. வி. , கம்ப்யூட்டர், மொபைல் போன் இந்த வசதிகள் எதுவும் வந்திருக்கவில்லை. ஆபீசும் விட்டா வீடும்தான் ஒரே பொழுது போக்கு.. தீபாவளி, பொங்கல்,யுகாதி, மேடே என்று சில பண்டிகைகள் சமயங்களில் அங்குள்ள பெரிய மைதானத்தில் மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஏதோ திருவிழாவுக்கு போவதுபோல எல்லாரும் போய் ஆர்வமாக கலந்து கொள்ளுவோம். அந்தவருட மே டே ஃபங்க்‌ஷனுக்கும் அப்படியே எல்லாரும் போனோம். மாலை 7- மணி அளவுக்குதான் நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பார்கள். பார்வையாளர்கள் பகுதியில் அன்று சேர் எல்லாம் போடமாட்டார்கள் உழைப்பாளர்கள் தினம் என்று எல்லாரும் கீழேதான் உக்காரனும். நாங்களும் 7-மணிக்கு திடலுக்கு போனோம். எங்களைப்போலவே நிறையாபேரு வந்து திடலில் கூடி இருந்தார்கள். கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மேடையில் சங்கீத கச்சேரி நடத்த மைக், ஸ்பீகர் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் எல்லாம் அடுக்கி கொண்டிருந்தார்கள்.

கல்யாணமாம் கல்யாணம் - 1

     சமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெண் வீட்டுக் கல்யாணம் என்பதால் கல்யாணத்துக்கு 4 - நாள் முன்பு சுமங்கலி பூஜை எல்லாம் முறையாக பண்ணினார்கள். அந்த ஃபங்க்‌ஷன் கோலிவாடா என்னுமிடதில் இருந்தது. ஆத்மார்த்தமாக, முறையாக எல்லாம் செய்தார்கள். பெண்ணின் அப்பாவுடன் பிறந்தவர் நவி மும்பை நெருல் என்னுமிடத்தில் வசித்து வந்தார். அவருடன் கூடப்பிறந்தவர்கள் 2 அண்ணா, 1 தம்பி. அந்த தம்பி வீட்டில் தான் பூஜை நடந்தது. எல்லாருமே குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்கள். 2 அண்ணாவும் வெளி நாட்டில் தோஹா கத்தாரில் இருந்து வந்திருந்தார்கள். சமையலுக்கும் ஆள் போட்டிருந்தார்கள். 

பலகரை ஜோதிடம்.



ரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது கோவில் வெளீ வாசல் தின்ணையில் ஒரு பெரியவரைச்சுற்றிநிறைய பேரு உக்காந்திண்டு இருந்தாங்க. நாங்களும் அங்க என்ன நடக்குதுன்னுபாக்கப்போனோம். அந்தப்பெரியவர் கை நிரைய சோழிகளை வைத்துக்கொண்டுஅதை குலுக்கிப்போட்டு எல்லாருக்கும் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்தார்.

கோபம்(2)

இன்றைய கோபம்,  B.S.N.L.  காரங்க மேல. நான் ரெண்டு வருஷமா போன் பில்
  E.C.S. மூலமாகத்தான் கட்டி வரேன். இவ்வலவு நாளா எல்லாம் சரியாதான்
இருந்தது. இந்தமாதம் போன் பில் 5000-ரூபாய்க்கு வந்தது.எனக்கு ஒரே ஷாக்
என்னது இது இவ்வளவு பில் எப்படி? என்று மண்டைக்குடைசல்.பேங்க் பாஸ்
 புக் எண்ட்ரியை பார்த்தேன். நாலு மாசமா பில் கட் பண்ணவே இல்லே. நானும்
 பாக்கலே. பேங்க்ல போயி கேட்டேன்.  B. S. N. L காரங்க பில் அனுப்பலே, நாங்களும் கட்டல்லேங்கராங்க. போன் ஆபீசுக்குப்போயி கேட்டேன். எனக்கு
எப்பவும் குழந்தைகள் எல்லாரும்தான் போன் பண்ணுவாங்க .நான்யாருக்குமே
 பண்ண மாட்டேன். அப்படி இருக்க இவ்வள்வு பில் எப்படி வரும்??அங்கபோனா
 அவங்க E. C. S. பத்தி என்கொயரி கல்யாண்லபோயி போன் ஆபீசில் கேளுன்னு
 சொல்லிட்டாங்க.அம்பர் நாத்லேந்து கல்யாண் 20 கிலோ மீட்டரில் இருக்கு.
லோக்கல் ட்ரெயின் பிடித்து போனேன். ஆபீஸ்போரவா கூட்டம் வண்டில
 நிக்கக்கூட இடம் இல்லே.10.30-க்கு போனேன். சீட்ல யாருமே வந்திருக்கலை.
 வெயிட்டிங்க தான். 11.30-க்கு ஆடி அசைஞ்சுண்டு வரா. நான் என் ப்ராப்லம்
 சொன்னேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...