Pages

Back to Top
Showing posts with label மெயிலில் வந்தது. Show all posts
Showing posts with label மெயிலில் வந்தது. Show all posts

DID YOU KNOW ABOUT THIS?


ஆசை


ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது 
அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்கு செல்வது 
காஞ்சி மகானின் தினசரி வழக்கம். பிச்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.  
ஒரு சமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்கு செல்லாமல் மடத்திலேயே
இருந்துவிட்டார் மகான். பிட்சைக்கு செல்லாததால், அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை. 

பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.
இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை.  

மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்கு செல்லவில்லை . எனவே, மடத்தில் உள்ளோருக்கு
பயம் தொற்றிக் கொண்டது.  மடத்தில் உள்ளோர் எதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு

பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.
அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் நின்றார்கள்.  

"எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்..!" 
எனப் பணிந்து வேண்டினர்.  
மகா பெரியவர் சிரித்துகொண்டே,  "நீங்கள் யாரும் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் 
கோபமும் இல்லை. என்னை திருத்திக்கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்சம் நாட்களுக்கு முன் பிச்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து இட்டிருந்தார்கள். 

அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.  பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிச்சையில்
கீரை இருக்குமா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிறைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். 
ஒரு சந்நியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது" என்றார்.  
ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் 
பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Hara Hara Sankara Jai Jai Sankara...

புதிய இந்தியா


இந்த கவிதையை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்றி

புதிய இந்தியா

"*levis jeans" **ஸும்,"van heusen"ஸும்
*வந்ததால் - எங்களின்*
*பருத்தி ...காதி துணிகள்**
பழசாய்ப் போயின**!

"நைட்டியும்","கவுனும்**"
வந்ததால் - எங்களின்*
*தாவணிகளும்,புடவைகளும்*
*தரமிழந்துப் போயின**!

"pizza" வும் "burger" ரும்*
*வந்ததால் - எங்களின்*
*இட்லி,சப்பாத்திக்களை*
*சுவை இழக்க வைத்தன**!

"axe perfume" உம் "olay" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மஞ்சளும்,மருதாணிக்களும்*
*வாசம் இழந்துப் போயின**!

"valentine's day, friendship day" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*நட்புக்களும்,கல்யாணங்களும்*
*கோர்ட் படிகள் ஏறுகின்றன**!

"cricket"டும்,"golf" பும்*
*வந்ததால் - எங்களின்*
*கபடியும்,மல்யுத்தமும்*
*களையிழந்துப் போயின**!

"wine" னும்,"vodka" வும்*
*வந்ததால் - எங்களின்*
*கூழையும்,கள்ளையும்*
*குழித்தோண்டிப் புதைத்தன**!

"standard charted,american express bank" கும்*
*வந்ததால் - எங்களின்*
*கூட்டுறவு வங்கிகள்*
*திவாலாகிப்போயின**!

"dollar ,euro" க்களும்*
*வந்ததால் - எங்களின்*
*மூளைகள் வெளிநாடுகளில்*
*அடமானத்திற்க்கு விற்கப்பட்டன**!

இதோ**....
"walmart" டும்,"tesco" வும்*
*வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்*
*நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்*
*உழைக்கும் விவசாயிகளும் கூட இனி**...
*அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்*
*மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்**.

*இருப்பதை விட்டுவிட்டு*
*பறப்பதற்கு ஆசைப்படும்*
*அரசியல் அதிகாரிகளுக்கு*
*மீனைவிட தூண்டில் பெரிதென்று*
*புரிவதெப்போது?*

Related Posts Plugin for WordPress, Blogger...