நடைமுறை.
மனிதனோடு கூடப்பிறந்தவை, கற்பனையும், எண்ணங்களும்.
அதை எழுத்தில் வடிக்கலாம் என்றுஎடுத்துரைப்பார் எல்லாருமே
எழுதவேண்டும் என்று இயம்பிக்கொண்டே வாழ்வோர் ஏராளம்.
எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டே வாழ்வோர் மிகப்பலர்.
எண்ணியதை எழுத்தில் நிறுத்தி, நிறைவு பெருவோர்வெகு சிலரே.
அதில் வெற்றிக்கொடி நாட்டுபவர் ஓரிருவரே.
எண்ணியதை எழுதும் வெகு சிலரில் என்னையும் ஒருத்தியாக்கு இறைவா.
| Tweet | |||||