Pages

Back to Top

விருது

கோபால் சார் எனக்கும் இன்னும் 108 பேருக்கும் விருது கொடுத்து பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி கோபால் சார்
                          


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

ஒன் டச் எஸ். எம். எஸ்


atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow

ரிலாக்ஸ் ப்ளீஸ்















படித்ததில் பிடித்தது (மீள் பதிவு)


சில பாக்கியசாலிகள்,தியாகம் செய்யாமலேயே பெயர் வாங்கி விடுகிறார்கள். சில துர்பாக்கியசாலிகள்

கடுமையான தியாகத்துக்கும், விளம்பரமில்லாமல் மறைந்து விடுகிறார்கள். அவர்களை மன்னரும்

மறந்து விடுகிறார்கள்,கவிஞரும் மறக்கிறார், உறவினர்களும் மறக்கிறார்கள்.




ராமாயணம் முழுவதிலும் யார், யாருடைய பெருமைகளோ பேசப்படுகின்றன. கணவனோடு காட்டுக்குச்

சென்ற சீதாவைப்பற்றி கம்பன் உருகுகிரான், கம்பனைப்படித்த ரசிகன் உருகுகிரான், கம்பனது சிருஷ்ட்டியில்

ராமனும் உருகுகிரான்.

ராங்க் நம்பர்

 வெங்கட் சார் போன் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. அப்போதான் என் இந்த பதிவையும் இன்னொரு தடவை போடலாமேன்னு தோனிச்சு.
ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

வேலை ரெடி

ஹோட்டலில் சாப்பாடு  ரெடின்னு போர்டு போட்டிருப்பதுபோல இருக்கா?
 நான் பதிவு எழுத ஆரம்பித்து சுமாரா ரெண்டு வருடங்கள் ஆகிரது. பலதரப்பட்டவர்களின் நட்பு கிடச்சிருக்கு 20- வயது முதல் 60 வயதுவரை நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. எல்லாருமே என்னிடம் மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் லஷ்மி அம்மான்னு அன்பாக பேசி பழகுராங்க. இது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லியா? போனமாசம் ஒரு பையன் (25 வயசு) அம்மா படிச்சுட்டு கொஞ்ச நாளா வேலை இல்லாம இருக்கேன் மும்பையில் எனக்கு ஏதானும் வேலை கிடைக்குமான்னு அவன் பயோடேட்டா எனக்கு அனுப்பினான். நானும் மும்பையில் தெரிந்தவர்களிடம் கேட்டுகிட்டு இருக்கேன். போன வாரம் துபாயிலிருந்து ஒரு ஃப்ரெண்ட் போன்பண்ணி அம்மா எங்க கம்பெனியில் வேலைக்கு ஆள் வேணும். உங்களுக்குத்தான் நெட்டில் நிறையா ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே தெரிஞ்சா சொல்ரீங்களான்னு கேட்டார். ஒருபக்கம் வேலை தேடும் இளைஞர்கள் இன்னொரு புறம் வேலைக்கு தகுந்த ஆட்கள் தேடும் பெரியவர்கள் எல்லாரும் என்னை அப்ரோச் பண்ணுவது சந்தோஷமா இருக்கு. அப்படி தனிதனியா யாரையும் விசாரிச்சுண்டு இருக்க முடியாதில்லியா அதனால அதையே ஒரு பதிவா போட்டுட்டேன்.
 துபாயில் ஆயில் கம்பெனியில் பொறுப்பான பதவியில் அவர் இருக்கார் அவங்க கண்டிஷன் சொன்னார் நானும் அதை கிழே சொல்லி இருக்கேன்.

 துபாயில் ஆயில் கம்பெனியில்  RIG SUPPLYARS  ஆக வேலை செய்ய ஆள் வேணுமாம்.
 கடுமையான உழைப்பாளியா இருக்கணும். அவங்களே ட்ரெய்னிங்கும் கொடுத்து நல்லா வேலையும் வாங்குவாங்க. ஹார்ட் ஒர்க்கரா இருக்கனும். இது ஜஸ்ட் டேபிள் ஒர்க் கிடையாது. அதே சமயம் கம்ப்யூட்டர் நாலட்ஜும் இருக்கணும் ஏதானும் ஒரு கிராஜுவேட் முடிச்சிருக்கணும். வயசு 26- க்குள் இருக்கணும் ஹிந்தி, இங்க்லீஷ், தமிழ்  நல்லா பேசத்தெரிஞ்சிருக்கணும் 50, லேந்து 55 -ஆயிரம் வரை சம்பளம் தருவாங்க. இதுதான் அவங்க கண்டிஷன்ஸ். இந்த தகுதி உள்ள பையன் யாரானும் தெரிஞ்சவங்க இருந்தா பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். நான் அவங்க மெயில் ஐ. டி தரேன் நீங்க அவங்களுக்கே உங்க பயோடேட்டா அனுப்பலாம். நான் வெரும் கைகாட்டி மட்டும்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...