Pages

Back to Top

சிந்தனைக்கு

 நஷ்டமில்லாமல் வெற்றி இல்லை
 முட்கள் இல்லாமல் அறியணை இல்லை
 முயற்சி இல்லாமல் பெருமை இல்லை.
 சிலுவை இல்லாமல் மகுடமில்லை.(அறிஞர் பென்)

 குவிந்து கிடக்கும் சாம்பல் மீது தண்ணீரைத்தெளித்தால்
 தண்ணீர் போன இடம் தெரியாது. நல்ல எண்ணம், நல்ல
 பிரார்த்தனைகள் இவைகளுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும்.
 அகம்பாவம் குவிந்து கிடக்கும் சாம்பலுக்கு சமமானது.
 அது இருக்கும் மனத்தில் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்
 எடுபடாது.(ராமகிருஷ்ன பரமஹம்சர்)

 சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது - இதயத்தின் இசை.
 சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் அது-சக்தியின் பிறப்பிடம்.
 விளையாட நேரம் ஒதுக்குங்கள் அது- இளமையின் ரகசியம்.
 படிக்க நேரம் ஒதுக்குங்கள் அது- அறிவின் ஊற்று.
 நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் அது- மகிழ்ச்சிக்கு வழி.
 உழைக்கநேரம்ஒதுக்குங்கள்அதுவெற்றியின்விலை.   

அன்பனே பொழுதைப்பொன்னாக்கு.ஒரு நிமிஷம் கூட வீணாக்காதே,
 யோசித்துப்பார், ஒரு நாளைக்கு 24-மணி நேரம். அதில் சுமார்8- மணி
 நேரம் இளைப்பாறலாம்.தேகப்பயிற்சி செய்ய, குளிக்க ,துவைக்க, உண்ண உடுக்க 4-மணி நேரம், வயிற்றுப்பிழைபுக்காக தொழில்புரிய8-மணி நேரம்
இந்த 8-மணி நேரத்தைப்பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் வெளியேசென்று அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கழிக்கலாம்.
 மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு.(சுத்தானந்த பாரதியார்)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

40 comments:

பால கணேஷ் said...

சுத்தானந்த பாரதியாரும் ராமகிருஷ்ணரும் சொன்னது மனதில் கொள்ள வேண்டிய அற்புத விஷங்கள். தேடி எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு... மிக்க நன்றி.

SURYAJEEVA said...

எட்டு மணி நேர வேலை என்பது இப்பொழுது எட்டா கனியாகி வருகிறது... பதினான்கு மணி நேரம் வேலை செபவர்கள் இருக்கிறார்கள்... உடலினை உறுதி செய்யவோ, உள்ளத்தை உறுதி செய்யவோ வழியில்லை அவர்களுக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

Time Management பற்றி பல அறிவாளிகள் சொன்ன மிக நல்ல அறிவுரைகளைப் பகிர்ந்து அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள். vgk

RAMA RAVI (RAMVI) said...

அருமையான தொகுப்பு அம்மா.நன்றி பகிர்வுக்கு.

ம.தி.சுதா said...

//// சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்////

அம்மா வாயால் சொல்லத் தான் முடிகிறது.. மனசு ஒத்துழைக்கவில்லையே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
செல்வச்சந்நிதி ஆலயத்தின் சூரன் போர் காணோளி (ஈழத்தை பிரிந்தவர்க்காக)

MANO நாஞ்சில் மனோ said...

அகம்பாவம் குவிந்து கிடக்கும் சாம்பலுக்கு சமமானது.
அது இருக்கும் மனத்தில் பிரார்த்தனைகளும், நல்லெண்ணங்களும்
எடுபடாது.//

மிக சரியாக சொன்னீர்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு//

நல்ல அறிவுரைக்கு நன்றி...

மகேந்திரன் said...

அத்தனையும் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய
வாழ்வியல் பொன்மொழிகள்
பகிர்வுக்கு நன்றி அம்மா...

K.s.s.Rajh said...

////அன்பனே பொழுதைப்பொன்னாக்கு.ஒரு நிமிஷம் கூட வீணாக்காதே,
யோசித்துப்பார், ஒரு நாளைக்கு 24-மணி நேரம். அதில் சுமார்8- மணி
நேரம் இளைப்பாறலாம்.தேகப்பயிற்சி செய்ய, குளிக்க ,துவைக்க, உண்ண உடுக்க 4-மணி நேரம், வயிற்றுப்பிழைபுக்காக தொழில்புரிய8-மணி நேரம்
இந்த 8-மணி நேரத்தைப்பெண்கள் வீட்டு வேலைகளிலும், ஆண்கள் வெளியேசென்று அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கழிக்கலாம்.
மீதி 4-மணி நேரம் உள்ளது. அதை வீணாக்காதே.அறிவுப்பயிற்சிகளிலும் ஆன்மீகப்பயிற்சிகளிலுமதைச்செலவிடு.(சுத்தானந்த பாரதியார்) ////

நல்ல அறிவுரை

radhakrishnan said...

அனைவரும் அறியவேண்டிய
விஷயங்கள் தொகுத்துக் கொடுத்தமைக்கு
நன்றி , அம்மா

VANJOOR said...

நல்ல‌தொரு ப‌திவு.

வாழ்த்துக்கள்

தொட‌ருங்க‌ள்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

ஷைலஜா said...

பரம ஹம்சரின் வாக்கு என்றைக்கும் பிடித்தமானது இங்கு பதிவாகி உல்ள அனைத்துமே அருமை.

Thozhirkalam Channel said...

தேடல்...

உயிர்கள் இடத்தே இருக்க வேண்டிய உயிரெழுத்து..

அம்மாவின் உயரிய தேடலுக்கு தலைவணங்குகிறோம்...

பிள்ளைகளின் பசி தீர்க்க,,, உங்கள் தேடல் பணி மேலும் சிறக்க வேண்டும்..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.லக்ஷ்மி,
மிக அழகிய உயரிய சிந்தனைகள். அவற்றை எழுத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனைகள்....

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அஷோக் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சூர்ய ஜீவா நீங்க சொல்வது சரிதான்.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம. தி. சுதா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நாஞ்சில் மனோ வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வாஞ்சூர் ஐயா வருகைக்கு நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

ஷைலஜா வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

cpede news வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

முஹம்மத் ஆஷிக் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

பொக்கிஷங்கள். அருமையான பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Jafarullah Ismail said...

அனைவரும் ஏற்கவேண்டிய அற்புதமான கருத்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி.

வலையுகம் said...

கண்ணியமிகு சகோதரி அவர்களுக்கு

// நல்ல எண்ணம், நல்ல
பிரார்த்தனைகள் இவைகளுக்கெல்லாம் நல்ல மனம் வேண்டும்.//

உயர்வான சரியான வார்த்தைகள்
வழி மொழிகிறேன்

குறையொன்றுமில்லை. said...

மு. ஜபருல்லாஹ், வருகைக்கு நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

ஹைதர் அலி வருகைக்கு நன்றி

Learn said...

ரொம்ப நல்ல சிந்தனை பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

குறையொன்றுமில்லை. said...

தமிழ்தோட்டம் வருகைக்கு நன்ரி

சித்திரவீதிக்காரன் said...

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின் அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது.
-வண்ணதாசன்.
தாங்கள் தொகுத்துள்ள பெரியோர் சிந்தனைகள் யாவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
-சித்திரவீதிக்காரன்.

குறையொன்றுமில்லை. said...

சித்திரைவீதிக்காரன் வருகைக்கு நன்றி. சார் நீங்க பதிவு எதுவும் எழுதலியா? உங்கபக்கம் வந்தேன் எதுவும் இல்லியே எழுதுங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...