Pages

Back to Top

ஒன் டச் எஸ் எம் எஸ்

atb---------  all  the  best

j4f---------  just for fun

sus-------- see  you  soon

6 u 5 n------ are  you  fine

i  m  u------- i  miss  you

n i-----------nice  one

w@---------- what?

w 8---------  wait

kit----------  keep in tuch

l m k-----------   let  me know

b4 n------------  bye  for  now

w 8  4  m--------wait  for  me

l @ m------------- look  at  me

 i a s---------------   i am sorry

@  d aa-------------- ' appaa'  daa

j a m------------------ just  a minute

d d----------------don't  dis turb

 n b------------- no  balance

 h a y------------how  are  you

o t w-------------  on the  way

m c------------   missed  call

c u 2 m------------  see  you  to mo rro w

2   w @ i s---------- do what i say
 t s  4 u------------   its  for  you

ts  2 l t-------------- its  too  late

cn  v mt  2 mr-----------can we meet  tomorrow



 இதெல்லாம் என் பேரக்குழந்தைகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட எஸ் எம் எஸ்
 வார்த்தைகள். எல்லாருக்குமே தெரிந்திருக்கும் விஷயம்தான். மகன், மகள்
வயிற்று பேரன்கள் 20 வயதை நெருங்கி கொண்டிருப்பவர்கள். காலேஜில்
 முதல் வருடம் படிக்கிரார்கள். 10- வரை அவர்கள் இருக்கும் இடத்திலேயே
 படித்தார்கள். அதன்பிறகு வேறு காலேஜில் வேறு இடத்தில் ரயில் ஏறிப்போய்
படிக்கனும்.அப்போ ஒரு வசதிக்காக மொபைல் வாங்கி கொடுத்திருக்கா.
10- வது வரை எல்லா பாடங்களிலும் 85% மேலே வாங்கிவந்தார்கள். நல்ல
 படிக்கும் குழந்தைகள்தான்.

காலேஜில் முதல் வருட பரீட்சையில் மெயின் இங்க்லீஷ் பேப்பரில் 50%
 மார்க்தான் எடுத்திருந்தார்கள்.குழந்தைகள் நல்ல புத்தி சாலிகள்தான்.
 அவ அப்பா, அம்மவிடம் பேசதயங்கும் குழந்தைகல் என்னிடம் கொஞ்சம்
 ஓபனாக எல்லா விஷயங்களுமே ஷேர் பண்ணிப்பா. காலேல காலேஜ்
 போய்வந்ததுமுதல் இரவுவரை நடந்த எல்லா விஷயமுமே போன்ல சொல்லுவா. பாட்டியிடம் அவ்வளவு ஃப்ரீயா பேசுவா. அப்பா, அம்மாக்களுக்கு
 அவங்க ஆபீஸ் விஷயங்களே தலைக்கு மேல இருக்கும் குழந்தைகளின்
 பேச்சு கேட்க, பொறுமையும் இல்லெ. டைமும் இல்லெ.

இது எல்லார் வீட்டிலும் உள்ளதுதான். மார்க் குறைந்ததும் என்கிட்ட சொன்னா.
 காலேஜில் ரிக்வெஸ்ட் பண்ணீ ஆன்சர் பேப்பர் வாங்கி பார்த்ததில் எல்லா
ஆன்சர்களுமே கரெக்டாகவே  எழுதி இருந்தார்கள். ஒரெ ப்ராப்ளம் என்னன்னா
 ஒரிஜினல் இங்க்லீஷ் ஸ்பெல்லிங்கே எழுதாம எல்லாம் எஸ் எம் எஸ்
 ஸ்பெல்லிங்கில் எழுதி இருந்தா.மொபைல் கையில் கிடைத்ததில் இருந்து ஃப்ரெண்ட்ஸ் களிடம்  எஸ் எம் எஸ் சாட் பண்ணீ பண்ணீ அந்த ஷார்ட்
 எழுத்துக்களே நினைவில் வந்து பரீட்சையிலும் அப்படியே எழுதிட்டா.
 எந்தவாத்யார் மார்க் கொடுப்பா. பரீட்சை எழுதும்போதுகூட ஷார்ட் ஸ்பெல்லிங்க் தான் நினைவில் வருது.

 செல்போனில் நிறைய நல்லதும் இருக்கு, கெடுதலும் இருக்கு. அதில் இதுவும்
 ஒன்று.இந்தக்கால குழந்தைகள் நல்ல டேலண்டாவும் இருக்கா, இண்டெலி
 ஜெண்டாவும் இருக்கா அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லே.
படிக்கும் காலேஜிலேயே காம்பஸ் இண்டெர்வியூ கலந்து நல்ல வேலையும்
படிப்பை முடிச்ச்துமே ரெடியா கிடைச்சுடுது.அவர்களுக்கு பக்குவமா எடுத்துச்
சொல்லி புரிய வைப்பது மூத்ததலைமுறையினரின்முக்கிய கடமையாகும்.
நான் எடுத்து சொன்னதும் அவங்க இருவருமே சரியா புரிந்து கொண்டார்கள்.
 பாட்டி இனிமே கவனமா இருப்போம் என்றார்கள்.

யாருடனும் அவர்களை ஒப்பிட்டு பேசாமல் நிலமையை அவர்களுக்கு
 பக்குவமா புரிய வைத்தால் அவர்களின் எதிர்காலம் பற்றி வீணாக கவலை
 பட வேண்டிய அவசியமே இல்லைதான்.அவர்களுக்கு பிரகாசமான எதிர்
 காலம் சிவப்பு கம்பளம் விரித்து காத்துண்டுதான் இருக்கு.


19 comments:

வெங்கட் நாகராஜ் said...

//யாருடனும் அவர்களை ஒப்பிட்டு பேசாமல் நிலமையை அவர்களுக்கு
பக்குவமா புரிய வைத்தால் அவர்களின் எதிர்காலம் பற்றி வீணாக கவலை
பட வேண்டிய அவசியமே இல்லைதான்.அவர்களுக்கு பிரகாசமான எதிர்
காலம் சிவப்பு கம்பளம் விரித்து காத்துண்டுதான் இருக்கு.//

உண்மையான வரிகள் அம்மா.

இந்த எஸ்.எம்.எஸ். வார்த்தைகள் இப்படி நிறைய ஷார்ட்ட்டா சொல்லி சொல்லி உண்மையான வார்த்தையே மறந்து விடும் என்பது 100% நிஜம்....

நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா..

Unknown said...

நல்ல பதிவு ....ஒரு நகைச்சுவை நடப்புடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரையும் சொன்ன அம்மாவுக்கு நன்றி ..

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப சரியாக சொன்னீர்கள் அம்மா..என் 2 பெண்களுக்கும் நான் cellphone வாங்கி கொடுக்கவில்லை.அவர்களுக்கு அது பெரிய குறையாக இருந்தது. நானும் என் கணவரும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை விளக்கியவுடன் புரிந்து கொண்டார்கள். பெரியவர்கள்தான் குழ்ந்தைகளுக்கு எடுத்து சொல்லவேண்டும் என்பது மிக சரி.

ஹுஸைனம்மா said...

ஆஹா, எனக்கு இப்பத்தான் நிறைய ‘ஷார்ட் ஹேண்ட்’ புரிஞ்சுது!! நன்றி.

Angel said...

வணக்கம் லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கீங்க ,

//அவர்களுக்கு பக்குவமா எடுத்துச்
சொல்லி புரிய வைப்பது மூத்ததலைமுறையினரின்முக்கிய கடமையாகும்//
அருமையான கருத்து ,ஒப்பிட்டு பேசுவது அவர்களை இன்னும் கோபப்படுத்துமே ஒழிய வேறு பயன் தராது .

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//யாருடனும் அவர்களை ஒப்பிட்டு பேசாமல் நிலமையை அவர்களுக்கு
பக்குவமா புரிய வைத்தால் அவர்களின் எதிர்காலம் பற்றி வீணாக கவலைபட வேண்டிய அவசியமே இல்லைதான்.அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் சிவப்பு கம்பளம் விரித்து காத்துண்டுதான் இருக்கு.//

s u r crkt,mam.( Yes...you are correct, madam)

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரியாஸ், நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராம்வி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹுஸைனம்மா, நிறய தெரிஞ்சு
கிட்டிங்களா? சந்தோஷம்.

குறையொன்றுமில்லை. said...

ஏஞ்சலின் வருகைக்கும் கருத்
துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

என்றென்றும் எல்லென், வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

கவி அழகன் said...

மிகவும் சுவாரசியமான படைப்பு

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன், நன்றி.

vanathy said...

எஸ். எம். எஸ் இவ்வளவு இருக்கா? நான் இதிலெல்லாம் தேறவே மாட்டேன். நீங்க சொன்ன பிறகு தான் இந்தளவு தெரிந்து கொண்டேன்.
பிள்ளைகள் நல்லா படிச்சாலே போதும்.

குறையொன்றுமில்லை. said...

வானதி இதையெல்லம் படிச்சதும் தேறியிருப்பியே ஹ, ஹ

athira said...

n i (nice one).

உங்கட எஸ் எம் எஸ் இலயே உங்களுக்குப் பதில் சொல்லிட்டேன், நல்லாயிருக்கு, ஆனா மனதில பதியமாட்டுதாம்:)).

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, ஹா

Anonymous said...

Super Lakshmima. Ithula paathi code engalukku theriyalaye

Related Posts Plugin for WordPress, Blogger...