Pages

Back to Top

தேவ் லாலி


 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.






போனதும் நல்லா சாப்பாடு. எனக்கு இரவு கொஞ்சமா தயிர் சாதம் மட்டுமே சாப்பிடமுடியும்.வேறு எதுவும்சாப்பிட்டா கஷ்டமாகும். யாரு சொன்னா கேக்குராங்க.இல்லைமா கொஞ்சமாவதுசாப்பிடுங்கன்னு அன்புத்தொல்லைகள்.சாப்பாடெல்லாம் முடிந்து நேரமாயிட்டதால ஹாலிலே
படுத்தோம்.பேசிப்பேசி தூங்கவே 2 மணி ஆச்சு.காலை7மணிக்குத்தான் ஒவ்வொருவராக எழுந்தோம்.இராத்ரில எதுவுமே பாக்கமுடியலை. பகல் வெளிச்சத்ல ஏரியாவே நல்லா இருந்தது. சுற்றி வர பசுமையான மரங்கள் .அதில் ஓடிப்பிடித்து விளையாடும் பலவிதமான பறவைகளின் சங்கீதம் என்று
சூழலே அருமையாக இருந்தது.பல் விளக்கினதும் சூடாக சாய் ரெடி.குடித்துவிட்டு ரெஸ்டாரண்டைசுற்றிப்பார்த்தோம்.
                          
                                      

ஆர்மிக்காரங்கல்லாம் எக்சர்ஸைஸ் வாக்கிங்க் மார்ச் பாஸிங்க்னு பிசியா இருந்தாங்க.டக், டக்னுஅவங்க ஷூ சப்தமே கம்பீரமா இருந்தது. 9 மணி வரை சுத்திட்டு ரூம் வந்து குளிச்சு ப்ரேக்ஃபாஸ்ட்டீ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் அரட்டை. என் தங்கை மகன் அந்த ஊரில் மிலிடரி ஆஸ்பிடலில் பெரிய
டாக்டரா இருந்தான். அவன் என்னைப்பார்க்கவந்தான். என்ன பெரிம்மா நம்ம வீட்டுக்கு வாங்கஎப்ப ஃபங்க்‌ஷன் இருக்கோ அப்ப வந்து கலந்துக்குங்கன்னான். கூடவந்தவங்களோ என்னைஅவங்க கூடத்தான் தங்கனும்னு சொல்ராங்க. அவங்களுக்கு சமாதானம் சொல்லி தங்கை மகன்வீடு போனேன். பெரிய வீடு. க்வார்ட்டர்ஸ்தான். ஆனாகூட சகல வசதிகளுடனும் நன்னா இருந்தது.

                        

மத்யானம் அங்கே சாப்பிட்டு சாயங்காலம் ஃபங்க்‌ஷனுக்கு போனேன். குழந்தைகளுக்கு பலவிதபோட்டிகள், ரன்னிங்க்ரேஸ், லெமன் ஸ்பூன் ரேஸ், ஃபேன்சி ட்ரெஸ் காம்பெட்டிஷன், பாட்டுஆட்டம் என்று போட்டிகள். பெரியவர்களுக்கும் மூயுசிகல் சேர்,அந்தாக்‌ஷரி, தம்போலா என்று
பலவித விலையாட்டுக்கள். ஜயித்தவர்களுக்கு என்னை பரிசு கொடுக்கச்சொன்னார்கள். இரவு11- மணி வரை நேரம் போனது தெரியாமல் விளையாட்டுக்கள். பிறகு டின்னர். நிலா சாப்பாடு
திறந்த வெளியில் அரட்டை அடிச்சுண்டே சாப்பாடு. பிறகு நான் தங்கை மகன் வீடு போனேன்.அவர்களுக்கு நான் இவ்வளவு பிரபலமா க இருப்பது நம்பமுடியாத விஷயமா இருந்தது. நான்வீட்டில் ரொம்பவே அமைதியான டைப். என்னைப்பார்த்ததும் அவர்களுக்கும் ரொம்பவே சன்தோஷம். அங்கும் குடும்பக்கதைகள் பேசி இரவு லேட்டாதான் தூங்கினோம்.
                  
                              

மறு நாள் சாயந்தரம் வேறு இடத்தில் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருந்தா. 6 மணிக்குத்தான் போனேன். எனாக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.அன்றுஆளாளுக்கு மேடை ஏறி லெக்சர் பண்ணினாங்க. எனக்கு மேடை ஏறி பேசெல்லாம்தெரியாதுங்க. என்னை விட்டுடுங்கன்னேன். அதெப்படி நீங்கதான் சீப் கெஸ்ட் நீங்கபேசியே ஆகனும்னு சொல்லிட்டாங்க. மைக் கையில பிடிச்சோடனே கை, காலெல்லாம்நடுங்குது, எப்படி பேச்சு வரும்? திணறிப்போனேன்.அதுவும் ஹிந்தி இல்லைனா மராட்டில
என்ன ஒளறிக்கொட்டினேனோ தெரியலை பலமா எல்லாருமே கை தட்டினாங்க. சரி ஏதோசுமாரா பேசிட்டோம் போல இருக்குனு நினைச்சேன்.
                            
இதையெல்லாம் வேடிக்கை பாக்க சுத்திவர ஒரே மிலிட்டரி ஆளுங்க வேர கூட்டமா நிக்குராங்க.எந்தங்கை பையனும், பெரிம்மா உங்களை நா என்னமோன்னு நினைச்சேன் பிச்சு உதறிட்டீங்கன்னுகைதட்டி பாராட்டரான்.மிலிடரி ஆளுங்கல்லாமே அவனோட ஃப்ரெண்ட்ஸ்தான் எல்லாருமேஎன்கிட்ட வந்து மாஜி, சூப்பர். தமிழ்க்காரங்களா இருந்துகிட்டு எப்படி எங்க பாஷைல இப்படிபேசுரீங்கன்னு ஆளாளுக்கு புகழராங்க. எனக்கே வெக்கமா போச்சு.11-மணிக்கு டின்னர். நிறையஐட்டங்கள் என்னால முடியவே இல்லை. சில சமயம் ஓவர் அன்பு கூட அன்புத்த்தொல்லயா ஆகுது.

                         
                               

மறு நா காலேலயே இவங்கல்லாம் என்னைக்கூப்பிட்டாங்க. 10 மணிக்கு வந்தேன். எல்லாரும்வட்டமா உக்காந்து யாருக்கு எப்போ பர்த்டே, எப்போவெட்டிங்க்டே என்று பேசிண்டு இருந்தா.என்னைப்பாத்ததும் உங்க பர்த்டே எப்போன்னாங்க ஏப்ரல் 2 ந்னு சொன்னேன். ஐயோ ஜஸ்ட்
மிஸ்ட். என்றார்கள். அதுபோல உங்க மேரேஜ் டே எப்போன்னாங்க. ஏப்ரல்19(அன்றுதான்)என்ரேன். ஹோன்னு ஒரேகைதட்டல் வாழ்த்துக்கள், அதுவும் 50-வது வெட்டிங்க் டே. நான்சொன்னேன் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கொண்டாடினாதானே சரியா இருக்கும்
இப்ப அவர் இல்லே, நான் மட்டு தானே இருக்கேன் அதனால நோ கொண்டாட்டம் என்ரேன்.அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது. எங்க சீப்கெஸ்டோட 50-வது வெட்டிங்க் டே நாங்க செலிபரேட் பண்ணத்தான் செய்வோம்னு ஆளாளுக்கு ஒரேஸ்வீட்டா ஆர்டர் பண்ணி அபிஷேகம்தான்எனக்கு அழுகையே வந்தது. ஒரு பாட்டு உண்டே அதுபோல நான் அழுதுகொண்டே சிரித்தேன்.
மறு நாளும் ஒரு ப்ஃங்க்‌ஷன், அதுக்கு மறு நாளும் ஒரு ஃபங்க்‌ஷன்னு ரொம்பவே அலைச்சல்எல்லாம் நல்லா கொண்டாடிட்டு 25 திரும்பவந்தோம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது, எனக்குத்தான் உடம்பு முடியவே இல்லை. ஏற்கனவேரெண்டு அட்டாக் ஒரே நாளில் சந்தித்தவள். இதுபோல ரெஸ்ட் இல்லாம சுத்த தெம்பே இல்ல்லே.
                        
இனிமேல யாரானும் கெட் டுகெதர்னு வந்தாலே சாரிம்மானு சொல்லிடுவேன். 4 நாளு தூங்கி
ரெஸ்ட் எடுத்தாதான் சரி ஆகும்.

33 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல அனுபவம். என்ஜாய் பண்ணுங்க...

Learn said...

அருமையான பதிவு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் அம்மா,

நினைவுகளை மீட்டிப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி,

K said...

வணக்கம் மேடம்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!

அருமையாக இருந்திச்சு உங்க கெட் டூ கெத்ர் அனுபவம்! ஆனா நீங்கதான் சலிச்சுக்கிட்டீங்க!

K.s.s.Rajh said...

நல்ல அனுபவப்பதிவு

வெங்கட் நாகராஜ் said...

அவ்வப்போது இது போல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது நன்றாகத்தான் இருக்கும்... ஆனால் தொடர்ந்து சில நாட்கள் என்றால் கஷ்டம் தான்...

நல்ல பகிர்வும்மா....

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாமே தங்களின் அனுபவப் பகிர்வுகளாக இருப்பதால் படிக்க நல்ல சுவாரஸ்யமாக உள்ளன. வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வும்மா. நன்றாக இருந்திருக்கும்.

சத்ரியன் said...

அடடே! மீள்பதிவா போட்டதுனால இதப் படிக்கிற பாக்கியம் கிடைச்சது பாத்தீங்களா?

vanathy said...

ஆன்டி, நல்ல பதிவு. நல்லா ரெஸ்ட் எடுங்க. நீங்க பேசினது பற்றி 2 லைனாவது எழுதி இருக்கலாம்.

குறையொன்றுமில்லை. said...

பிரகாஷ் நன்றி

குறையொன்றுமில்லை. said...

தமிழ்தோட்டம் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரூபன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஐடியா மணி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி நன்றி

குறையொன்றுமில்லை. said...

சத்ரியன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வானதி நன்றி

KANA VARO said...

நினைவுகள் சூப்பர இருக்கு அம்மா

குறையொன்றுமில்லை. said...

கானா வரொ, வருகைக்கு நன்றி

Anonymous said...

நமக்கு இதுகள் வெலங்களைங்கோ..நமக்கு மொக்கைதான் தெரியுமுங்கோ..அதால் விருவான கமண்டு இல்லைங்கோ

குறையொன்றுமில்லை. said...

ஸ்டைல் நாராயன் என்ன விளங்கலிங்கோ?

சுதா SJ said...

அசத்தலாய் இருக்கு

குறையொன்றுமில்லை. said...

துஷ்யந்தன் வருகைக்கு நன்றி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அழகான வார்த்தை நடை !
மெல்லிய நகைசுவை ..!
புத்தகம் போட கூடிய
படைப்பு. ரசித்து படித்து
மகிழ்த பதிவு .
நன்றி !
யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அழகான வார்த்தை நடை !
மெல்லிய நகைசுவை ..!
புத்தகம் போட கூடிய
படைப்பு. ரசித்து படித்து
மகிழ்த பதிவு .
நன்றி !
யானைக்குட்டி

குறையொன்றுமில்லை. said...

யானைக்குட்டி ஞானேந்திரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

radhakrishnan said...

நல்ல பதிவு.நல்ல கெட்டுகதர்.
நல்ல அனுபவம்.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்ணன் வருகைக்கு நன்றி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

Laxmi mam
உங்கள் பாராட்டு என்னை மிகவும்
ஊக்கம் கொடுத்து
என்னை மேலும் மெருகு
படுத்தும் .
எங்களுடன் நீங்கள் பதிவு உலகில்
இருப்பதையும் அதிலும் வெற்றி பெற்ற
முதமையான பதிவரிடம் இருந்து
பாராட்டு பெறுவது என்னை என்னால்
நம்ப இயலவில்லை ......
மிகவும் நன்றி
யானைக்குட்டி

குறையொன்றுமில்லை. said...

யானைக்குட்டி ஞானேந்திரன் ரொம்ப சந்தோஷம். நானும் உங்களை எல்லாம் போல ஒரு சாதாரண பதிவர்தான் வெற்றி பெற்ற பதிவர்லாம் இல்லெப்பா. அதுக்கு இன்னும் நிறைய முன்னேறணும். எப்படியோ உன் பின்னூட்டம்படிக்க மிகவும் உற்சாகமா இருக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...